Sunday, May 24, 2009

முதல்வர் கருணாநிதியின் ஆதரவுப் பதிவாளர்களுக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் தீவிர ஆதரவாளர்களாக வலைப்பதிவுலகில் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட லக்கிலுக், முத்து தமிழினி உட்பட்ட வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உங்களிடம் "முதலும்" கடைசியுமாக நானும் என்னைச் சார்ந்தவர்களும் வைக்கும் ஒரு வேண்டுகோள் இது.

தயவு செய்து பிரபாகரனுக்கான கவிதையை முதல்வர் கருணாநிதி எழுதாமற் பார்த்துக் கொள்ளுங்கள்.

கவிப்பேரரசர்களும் எழுதாமலிருப்பது விரும்பத் தக்கது. ஏன் எவருமே ஒப்பாரி வைக்காமலிருப்பது நன்று. ஆனால் எமது குறைந்தபட்ச விருப்பமாகவிருப்பது மேற்கூறிய வேண்டுகோளே.

-----------------------------------

Comments:
கவலை வேண்டாம், அவர் எழுத மாட்டார். பிரபாகரன் உயிரோடு இருப்பதை அவர் நன்கு அறிவார்.

மேலும் அவருக்கு வேறு சில முக்கிய (மக்கள்) பணிகள் இருக்கின்றன.
 
முதுபெரும்தலைவர் டாக்டர் கலைஞர் தன் மக்களுக்காக போராட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் (எழுதி ரெடியாக இருந்தாலும்) கவிதையை வெளியிடமுடியவில்லை. காலம் கனிந்து ஒரு நாள் விடியற்காலை கவிப்பேரரசுவிடம் இருந்து தொலைபேசி வரும்போது கண்டிப்பாக வெளியிடப்படும். அதை எந்த தமிழின எதிரியாலும் தடுக்க முடியாது. அந்த நாள் எப்போது வரும் என்று ஏக்கத்துடன் காத்திருக்கும்,

உடன்பிறப்பு
 
வந்தேன்..

படித்தேன்....

போகிறேன்...

உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்...

இப்பொழுதாவது...

ம்ம்ம்ம்ம்ம்
 
கவலைப் பட வேண்டாம் தோழா ... இப்போதைக்கு பாட மாட்டார் ! ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க எது வேண்டுமானாலும் நடக்கலாம்...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]