Wednesday, February 16, 2005

மன்மத பாணம்...

வணக்கம்!
மன்மதராசா பற்றி கறுப்பி எழுதியதும் பதிலாக பெயரிலி எழுதியதும். கறுப்பியின் பதிவில் பின்னூட்டம் இடப்போன நேரத்தில் அதுகொஞ்சம் நீண்டு விட்டதால் இங்கே தனிப்பதிவாக அதை இடுகிறேன். (மன்மதன் திரைப்படத்தை விட ஈழத்துப்பாடல்கள் ஆபத்தானவை என்கிற ரீதியில் கறுப்பி எழுதியிருந்தார்.)

கேட்பதன் மூலமும் பார்ப்பதன்மூலமும் அடையும் தாக்கத்திற்கிடையில் வித்தியாசமுண்டா? பின்னையது சற்றுக் கூடுதலான தாக்கத்தைத்தரும் என்றே நினைக்கிறேன். சமமானதுதான் என்றே எடுத்துக்கொள்வோம், அதெப்படி பாடல்கள்மூலம் ஏற்படும் தாக்கம் படங்கள் மூலம் இல்லாமற்போகும். ஒன்றில் இரண்டுமே அவர்களுக்கு விளையாட்டாய் இருக்கும். அல்லது இரண்டுமே தாக்கத்தை விளைவிப்பவையாயிருக்கும். இரண்டுமே சிறுவர்களால் புரிந்து கொள்ளப்பட்டால் ஏற்படும் தாக்கம் வித்தியாசமானது. கறுப்பி சொல்வதுபோல் பாடல்களைக் கேட்பதால் சிறுவர்கள் ஆயுதம் தூக்கினால் அது ஈழத்திலேதான். (புலம் பெயர்ந்த நாட்டிலல்ல) ஏனென்றால் பாடல்களில் தெளிவாகவே சொல்லப்படுகிறது யாரைக் கொல்ல வேண்டுமென்றும் எங்கே தூக்க வேண்டுமென்றும். இன்னொரு விசயம், கறுப்பி சொல்லும் கலாச்சாரத்திலிருந்து (This is my mom’s boy friend) ஒருவன் பாடல்களைக் கேட்டு ஆயதம் தூக்குவது சாத்தியப்படுமா? ஆயதம் தூக்க அவ்வளவு காரண காரியங்கள் இருந்தும் யாருமே ஈழத்தில் பாடல்களை மட்டும் கேட்டு ஆயதம் தூக்கியதில்லை. (பாடல்கள் ஓர் உந்துசக்தியே தவிர அதுமட்டுமே காரணியாகமுடியாது). ஆனால் படங்களில் சொல்லப்படும் வன்முறைக்கான காரணிகள் அவர்களின் காலடியிலேயே நடப்பவை. எங்குமே அவை சாத்தியப்படக்கூடியவை.

இரண்டுமே தவறு, இரண்டையுமே தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது ஒருவகை. ஆனால் மன்மதன் பிரச்சினையில்லை, ஈழத்துப்பாடல்கள்தான் பிரச்சினை அவற்றைத் தடைசெய்ய முயற்சிக்க வேண்டுமென்று கூறுவது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை. தரமிழந்த சினிமாப்பாடல்களைக் கூடத்தான் சிறுவர்கள் பாடி ஆடுகிறார்கள். இவர்கள் கல்யாணம் கட்டிக்கொண்டு ஓடிப்போகப்போகிறார்கள் என்று எவர் கவலைப்பட்டார்? ஆயுதம் தூக்கி வங்கி கொள்ளையிடவோ வழிப்பறி செய்யவோ இன்னும் என்னென்னவெல்லாமோ செய்யத் தூண்டும் சூழலை விட (திரைப்படங்கள் உட்பட) ஈழத்துப்பாடல்கள் ஆயுதம் தூக்க உந்துகிறது எனச்சொல்வது கேலிக்கிடமானது.
அட! விடுதலைப்புலிகளுக்கும் கூடவா இது பிடிபடாமற்போனது. பேசாமல் காசு தரச்சொல்லி நிறையப்பாட்ட வெளியிட்டா இப்ப குடுக்காட்டியும் அந்தப்பாட்டக் கேட்டு வளருற பிள்ளையள் பின்னொரு காலத்தில அள்ளியள்ளிக் குடுப்பினமெல்லே.

Labels: ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]