Wednesday, May 18, 2005
குளக்கோட்டனும் புத்தனும்
திருகோணமலையில் ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டது சம்பந்தமாகப் பதற்றம் தோன்றியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபைக்குச் சொந்தமான பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தம்மிடம் எதுவும் சொல்லப்படவில்லையென்றும் தகுந்த அனுமதி பெறப்படவில்லையென்றும் நகரசபைச் செயலர் க.விபுலானந்தன், உத்தியோகத்தர் சுந்தரம் அருனமநாயகம் ஆகியோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிற்க, "இச்சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால் தாம் தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என "குளக்கோட்டன் படை" என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லாளன் படை, சங்கிலியன் படை என்பவற்றின் தொடர்ச்சியாகவே நான் இந்தக் குளக்கோட்டன் படையைக் கருதுகிறேன். ஆக, ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது. இதற்கிடையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர் ஒருவர் சிங்களக் கும்பலொன்றினால் காது துண்டிக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இச்சிலை சம்பந்தமாக அப்பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தாலேயே எனவும் சொல்லப்படுகிறது.
புத்தர் சிலையென்பது தனியே மதச்சின்னம் என்பதையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எனவே இச்சிலை சம்பந்தமாக கடும் விசனம் தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படும் என்பது திண்ணம். இந்த சிக்கலான நேரத்தில் இப்படியொரு பிரச்சினையைக் கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமொன்று கிளம்பிவிட்டது. குளக்கோட்டன் படை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நிலமை சுமுகமாக இல்லையென்பதையே காட்டுகிறது.
நன்றி: தமிழ் நெட், சங்கதி.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நகரசபைக்குச் சொந்தமான பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தம்மிடம் எதுவும் சொல்லப்படவில்லையென்றும் தகுந்த அனுமதி பெறப்படவில்லையென்றும் நகரசபைச் செயலர் க.விபுலானந்தன், உத்தியோகத்தர் சுந்தரம் அருனமநாயகம் ஆகியோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நிற்க, "இச்சிலையை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால் தாம் தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என "குளக்கோட்டன் படை" என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லாளன் படை, சங்கிலியன் படை என்பவற்றின் தொடர்ச்சியாகவே நான் இந்தக் குளக்கோட்டன் படையைக் கருதுகிறேன். ஆக, ஏதோ வில்லங்கமாக நடக்கப்போகிறது. இதற்கிடையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர் ஒருவர் சிங்களக் கும்பலொன்றினால் காது துண்டிக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இச்சிலை சம்பந்தமாக அப்பகுதியில் ஏற்பட்ட குழப்பத்தாலேயே எனவும் சொல்லப்படுகிறது.
புத்தர் சிலையென்பது தனியே மதச்சின்னம் என்பதையும் தாண்டி பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எனவே இச்சிலை சம்பந்தமாக கடும் விசனம் தமிழர் தரப்பிலிருந்து வெளிப்படும் என்பது திண்ணம். இந்த சிக்கலான நேரத்தில் இப்படியொரு பிரச்சினையைக் கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமொன்று கிளம்பிவிட்டது. குளக்கோட்டன் படை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை நிலமை சுமுகமாக இல்லையென்பதையே காட்டுகிறது.
நன்றி: தமிழ் நெட், சங்கதி.
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், மக்கள் எழுச்சி
Comments:
<< Home
எழுதிக்கொள்வது: வன்னியன்.
சிலைப்பிரச்சினை இருக்கு. ஆனால் இனப்பிரச்சினையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டது.
9.57 19.5.2005
Post a Comment
சிலைப்பிரச்சினை இருக்கு. ஆனால் இனப்பிரச்சினையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டது.
9.57 19.5.2005
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]