Monday, November 23, 2009
புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும்
இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தைத் தப்பிப் பிழைக்க விடுவதில்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சக்திகள் விடாது முயற்சிப்பதை அறிய முடிகிறது. இயக்கம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொடர் சவால்களில் மிகப் பிந்தியதும் மிகவும் பாரதூரமான விளைவுகளைத் தரக்கூடியதுமான சிக்கல்தான் களத்திலிருந்து தளபதி ராம், நகுலன் போன்றோர் வெளியிடுவதாக வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள்.
இப்போது ராம், நகுலன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் அல்லது அவர்கள் வெளியிடச் சொன்னதாகச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் தனிப்பட்டவர்களோடு செய்து கொள்ளும் உரையாடல்களும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. சிலநாட்களின் முன்னர் குறிப்பிட்ட தளபதிகளும் பொறுப்பாளர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாமிலிருந்தவாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஓர் அறிக்கை மறுபுறத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.
இறுதியாக தளபதி ராமினால் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் பொறுப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சாடி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி, சொத்துக்கள் என்பன பேசப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமெனவும், தற்போது தாயகத்திலுள்ள போராளிகள் தொடர்பாகவோ, கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாகவோ, முகாம்களிலிலுள்ள மக்கள் தொடர்பாகவோ அக்கறையற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டுக்களில் சில தமிழ்மக்களிடமும் உள்ள அபிப்பிராயங்களே. இதனால் மிக இலகுவாக இவை தமிழ்மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்குழுவுக்கும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் குறைக்க வழிசெய்யும் நிலையிலுள்ளன. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக்கவனமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஒருவகையில் இந்த அடியை வாங்க புலிகள் தகுதியானவர்களே. மறுபுறத்தில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தளதிகளான இராம், நகுலன் உட்பட்டோர் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியமை ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை மக்களிடம் மறைத்து இவ்வளவு நாளும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தளபதி ராம் அனுப்பிய அவரின் தனிப்பட்ட அறிக்கையைக் கூட செயற்குழுவின் சார்பில் பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். தளபதி ராமோடு தொலைத் தொடர்பு வழியான தொடர்பினைக் கொண்டிருந்தார்கள்.
தமது பிடியிலிருந்த ராமையும் நகுலனையும் இன்னும் சில முக்கிய பொறுப்பாளர்களையும் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத் தரப்பு எஞ்சிய புலிகள் அமைப்பின் செயற்குழுவோடும் செயற்பாட்டாளர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் (கே.பி யின் கைதுக்குப் பின்னர்) இவைகள் தெரிந்தும்கூட தமக்கு எதுவும் தெரியாதது போல புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்கத்தின் சொத்துக்கள், நிதி வழங்கல் வழிமுறைகள், செயற்பாட்டாளர்கள் பற்றி சாடைமாடையாகக் கதைபிடுங்க அவர்களும், அத்தருணங்களில் இலாவகமாகத் தப்பி இவர்களுமென இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இவ்வளவு காலம் நீண்டிருந்ததே ஆச்சரியம்தான்.
இப்போது மாவீரர் நாளையொட்டி இந்தக் கண்ணாமுச்சி விளையாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களுக்கான புலிகளின் மாவீரர்நாள் செய்தி ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அவ்வறிக்கையில் சொல்லப்படும் விடயங்களில் தமது நோக்கத்தைத் திணிக்க முயன்று தோற்றுப் போன நிலையில் சிறிலங்கா அரசதரப்பு தனது தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதன்படி மாவீரர் நாளுக்கான உரை வழமைபோல் இடம்பெறும் என்ற அறிவிப்பு தளபதி ராமின் பெயரால் நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழுவால் விடுக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் எச்சரிக்கையடைந்து கொண்டன. சில ஊடகங்கள் மட்டும் அதை வெளியிட்டு, பின்னர் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க அவ்வறிக்கையை நிறுத்திக் கொண்டன.
இனிமேலும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர முடியாத நிலையில்தான் புலிகள் இயக்கம் உண்மையை ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அதை சில ஊடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்ததைப் போல் மறுதரப்பிலிருந்து உணர்ச்சிமயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலில் இராணுவ, புவியியல் நிலைமைகளைக் கொண்டு சிலவற்றை ஊகிக்க முற்படுவோம்.
மே மாதம் 18 ஆம் நாளோடு வன்னி முழுவதும் சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே தளபதி ராம், நகுலன் ஆகியோரோடு சில நூறு போராளிகள் அம்பாறையை மையமாக வைத்துச் செயற்பட்டு வந்தார்கள். அம்பாறையில் இருந்த புலிகளின் இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க சிறிலங்கா அரசபடை தன்னாலான முயற்சிகளை எடுத்தது. கஞ்சிக் குடிச்சாறு வனப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டைகளை நடத்தியதும், அங்கே பல சண்டைகள் நடந்ததும் நாமறிந்ததே.
இந்நிலையில் வன்னிப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர் மிகப்பெரிய ஆளணிவளத்தோடிருந்த சிறிலங்கா இராணுவம் தனது அடுத்த நடவடிக்கையாக கிழக்கின் காடுகளில் இருக்கும் தளபதிகளையும் போராளிகளையும்தான் வேட்டையாடியிருக்கும். வன்னியில் உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்தபோதே தனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி வளத்தோடு அம்பாறைக் காடுகளில் தேடுதல் வேட்டையிலீடுபட்ட அரசபடை, பின்னர் அப்படியெதுவும் செய்யாது பேசாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியின் அழிவுக்குப்பின்னர் அம்பாறைக் காடுகளில் சண்டைகள் நடந்ததாக இருதரப்பிலிருந்தும் தகவல்களில்லை. சுமார் ஆறுமாதகாலமாக தளபதி ராமையும் ஏனையவர்களையும் செயற்பட விட்டுக்கொண்டு அரசபடை பேசாமலிருந்தது என்பது நம்புவதற்குக் கடினமே.
இதே காரணத்தை வன்னியிலும் பொருத்திப் பார்த்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும். வன்னிக் களத்திலே தலைவரோ முக்கிய தளபதி யாரேனுமோ இறக்காமல் தப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கோ காடுகளுள்தான் மறைந்திருக்கிறார்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சிறிலங்கா அரசபடை இவ்வளவு காலமும் பேசாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தளபதிகளல்லாதவர்களைக் கொண்ட மிகச் சிறு அணிகள் சிலவேளை தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டேயன்றி வேறு சாத்தியங்களில்லை. இந்திய இராணுவக் காலப்பகுதியை உதாரணப்படுத்தும் காலம் இதுவன்று. சிறிலங்கா அரசபடையினரின் ஆட்பலம், நவீன வசதிகளைக் கொண்ட நுட்பப் பலம் என்பன இன்றைய நிலையில் மிகமிக உயர்ந்த நிலையிலேயே உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மேற்படிச் சந்தேகம் இப்போதன்று, முன்பே விடயம் தெரிந்தவர்களால் கதைக்கப்பட்டதுதான். காடுகளில் சண்டை நடப்பதாகத் தன்னும் செய்திகளைக் கசிய விடுவதன் மூலம் தமது சூழ்ச்சிக்கான நம்பகத்தன்மையைப் பேண அரசு முயற்சிக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை எங்கள் மேல்!
சரி, இனி தற்கால விடயத்துக்கு வருவோம்.
ராமின் பெயரால் வெளியிடப்பட்ட, வெளியிடப்படும் அறிக்கை பலரிடையே சலனத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது வெளிப்படை. முன்னாள் இயக்க உறுப்பினர்களாகவும் தற்போதைய செயற்பாட்டாளராகவுமுள்ளவர்கள் கூட இவ்வறிக்கையை நம்பத் தலைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையே. பதிவர் சாத்திரியும் அவர்களுள் ஒருவர். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பலவற்றை நாமும் பேசுகிறோம்தான். அதற்காக தவறான இடத்திலிருந்து வருமோர் அறிக்கைக்கு நாம் ஆதரவு வழங்கி எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகாமலிருப்பது முக்கியமானது. அதுவும், இதற்கு முந்திய அறிக்கையில், மாவீரர் தினத்தில் கொள்கை விளக்க அறிக்கை வெளிவரும் என்றுகூடப் போடாமல், 'உரை' நிகழ்த்தப்படும் என்று எழுதப்பட்ட பின்னரும் அவ்வறிக்கையை நம்புவது ஏனோ தெரியவில்லை. தலைவரின் இடத்திலிருந்துகொண்டு உரை நிகழ்த்தக்கூடியவராகத் தன்னைக் கருதிக் கொள்பவரில்லை ராம் என்பது அவரையறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொன்று வந்தால் மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த கேள்வி.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமாகவும், நேர்மையாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ இழப்பென்பது திடீரென ஏற்பட்ட ஒன்றன்று. அதற்கான அத்திவாரம் முன்பே போடப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடும் திறமையோடு எதிரியால் நகர்த்தப்பட்ட காய்களும், அவற்றை முறியடிக்கத் தவறிய எமது தவறும் முக்கியமானவை. வன்னியின் வீழ்ச்சிக்கு முன்பே எமக்கான ஆப்பை இறுக்கிவிட்ட எதிரியின் நகர்வுகள், அதில் பகடைக்காயாக்கப்பட்ட எமது போராளிகள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிட வேண்டும். நேர்மையாகவும் தீவிரமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த தளபதி ராம் போன்றவர்கள் எவ்வாறு சூழ்ச்சியின் வலையில் சிக்கவைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள், ஏனையவர்கள் எப்படி பிடித்துக் கொடுக்கப்பட்டார்கள், முழுவிருப்போது எதிரியியோடு இணைந்து பணியாற்றிய துரோகிகள் யார் என்பவனவற்றையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டிய நேரமிது. இனியும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேலைக்குதவாது.
எமது ஈழவிடுதலைப் போராட்டம் இனி எப்படிப் போகுமென்பது தெரியவில்லை. அதை ஒற்றைமாடாக இழுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் என்ன கதியாகுமென்று தெரியவில்லை. ஆனால் (குறைந்தபட்சம்) அவ்வியக்கத்துக்கு ஒரு பொறுப்புண்டு. நடந்ததைச் சொல்லுங்கள். புலனாய்வுப் பகுதியில் எதிரியை முறியடிப்பதில் தோற்றுவிட்டோம். அனால் என்ன நடந்ததென்பதையாவது மறைக்காமல் சொல்வது இயக்கத்தின் கடமை.
உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?
எமது இயக்கத்தின் மீதான எதிரியின் சூழ்ச்சித் திட்டங்களும், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும், அதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள், பலிக்கடா ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமடங்கிய விரிந்த அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்.
Labels: அரசியற் கட்டுரை, இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், விமர்சனம்
Sunday, August 09, 2009
பத்மநாதன் கைதுக்கு யார் காரணம்?
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு பெரும் பின்னடைவு இது.
நீண்டகாலம் ஆயுதவழியில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை கடந்த மேமாதம் அழிக்கப்பட்டதோடு அவ்வியக்கம் தளத்தில் செயலிழந்தது. ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்ற அறிவிப்போடு அவ்வியக்கம் தமது ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டது.
இந்நிலையில் கே.பியைத் தலைமைச் செயலராகக் கொண்டு வன்முறையற்ற வழியில் தொடர்ந்தும் செயற்படும் நிலைப்பாட்டை புலிகள் அமைப்பு எடுத்தது. இது புலத்திற் செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினராலும், தொடர்ந்தும் களத்திலிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தொடக்கத்தில் மிகச்சிலரால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோதும்கூட அவை சரிப்படுத்தப்பட்டு அவ்வியக்கம் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கத்துக்கு மட்டுமன்றி, அவ்வியக்கத்தைச் சார்ந்த தமிழ்மக்களும் பேரதிர்ச்சியே.
இந்த நிலைமைக்கு யார் காரணம்?
கே.பியின் அதிகரித்த நகர்வுகள், பகிரங்கமான நடமாட்டங்கள், நேர்காணல்கள், ஏராளமான சந்திப்புக்கள் என்பவை அவருக்கு ஆபத்தானவையாக அமைந்தன. ஆனால் அவர் அப்படிச் செயற்பட வேண்டி வந்ததற்கான காரணகர்த்தாக்கள் வேறுயாருமல்ல, நாம்தாம்.
கே.பி மீதான அவதூறுகள், வசைபாடல்கள், கயமைத்தனமான விமர்சனங்களை நோக்கினால் அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய காரணிகளை அறியலாம்.
'நிழல் மனிதர்', 'அனாமதேயப் பேர்வழி' போன்ற சொற்களால் அவர் குறிப்பிடப்பட்டார். அவரது மறைப்புத்தன்மையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரது தலைமையை எதிர்க்கச் சிலர் கிளம்பினர். அது படிப்படியாகக் குறைந்தபோதும் இன்றுவரை அந்த விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாத இவரா எமக்குத் தலைமை என ஒரு கூட்டம் கிளம்பியது. இதைவிட, மக்களோடு தொடர்பிலில்லாத மர்ம மனிதர் அவர், எப்படி இவரால் ஒழுங்காகக் செயற்பட முடியுமென்ற விமர்சனம் வைக்கப்பட்டது. கே.பிக்கான ஒத்துழைப்பு சரியாக வழங்கப்படவில்லை. வீம்புக்காக அவரை எதிர்த்து நின்ற கூட்டம் தொடர்ச்சியான அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.
இவ்வளவும் புலிகள் இயக்க உறுப்பினர்களால் செய்யப்பட்டவையல்ல. (ஆம், புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் சிலர் முரண்பட்டது உண்மையே! அவர்களின் எதிர்ப்பில் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. அதைவிட அவர்களுக்கு அந்த அருகதை இருந்தது. இறுதியில் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள்.) புலிகள் அமைப்பின் உறுப்பினரல்லாத, ஆனால் தாம்தான் இயக்கம் என்ற மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த நபர்கள்தாம் இதில் முக்கியமானவர்கள்.
அவர்கள் "பலர்" வியாபாரிகளாயிருந்தார்கள், ஊடகவியலாளராய் இருந்தார்கள், இராணுவ /அரசியல் ஆய்வு என்ற பேரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பவர்களாய் இருந்தார்கள், இயக்கம் தனது செயற்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திய மக்கள் அமைப்புக்களில் அங்கத்தவராய் அல்லது பொறுப்பாளராய் இருந்தார்கள், யுத்தநிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குப் போய் நாலு புகைப்படம் பிடித்துக் கொண்டு வந்தவர்களாய் இருந்தார்கள், பொறுப்புக்காகவும் நாலுபேரை மேய்க்கும் மனமகிழ்ச்சிக்காகவும் ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்களாய் இருந்தார்கள்.
இவர்கள் தமக்குத் தெரிந்த நாலுபேரையும், பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் வைத்தே இயக்கத்தை அறிந்திருந்தார்கள். கே.பி ஏதோ இவ்வளவுநாளும் ரொட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரெனத் தலைமைக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
வேறு "சிலர்" உண்மையில் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் அயோக்கியத்தனமான காரணங்களால் கே.பியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நபர்களின் திருகுதாளங்களால் மக்கள் குழப்பமடைந்தார்கள். கே.பிக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவர் தனது கூண்டுக்குள்ளிருந்து வெளிவர வேண்டியிருந்தது. மர்ம மனிதர், நிழல் மனிதர், அனாமதேயப் பேர்வழி போன்ற வசைகளை எதிர்கொள்ள அவர் ஓரளவு வெளிப்படையாகச் செயற்பட வேண்டியிருந்தது; ஊடகங்களோடு உரையாட வேண்டியிருந்தது; பலரோடு நேரடிச் சந்திப்புக்களைச் செய்ய வேண்டியிருந்தது. குழப்ப நிலையிலிருந்த பல செயற்பாட்டாளரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்ததன் மூலமே அவர் பல சிக்கல்களைத் தீர்த்து முன்னேறினார். செயற்பாட்டு மந்தநிலையைக் களைய தானே நேர்நின்று செயற்பட வேண்டுமெனத் தீர்மானித்தார்.
தான் யாரென்பதையும் தானொரு முக்கியமானவர் என்பதையும் தானே சொல்ல வேண்டிய அவலநிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். மிகச்சிலரைத் தவிர எல்லோராலும் இது வோறோர் ஆள் என்று இதுவரை காலமும் இனங்கண்டுகொண்டிருந்த புகைப்படங்களில் நிற்பது தானேதான் என்ற உண்மையை அவரே புகைப்படங்களை வெளியிட்டுச் சொல்ல வேண்டி வந்தது. (காட்டுக்குள் பாலா அண்ணை, சங்கர் அண்ணை, தலைவரோடு நிற்பது மு.வே.யோ வாஞ்சிநாதன் என்பதாகவே- கே.பியையும் வாஞ்சிநாதனையும் தெரிந்தவர்களைத் தவிர்த்து- பெரும்பாலானவர்களால் இதுவரை காலமும் நினைக்கப்பட்டு வந்தது.)
இவ்வாறான செயற்பாடுகள் தனது பாதுகாப்புக்குப் பாதகமென்பதை அவர் நன்கு அறிந்தேயிருந்தார். ஆயினும் அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து எச்சரித்தவர்களிடம், தான் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதை விசனத்தோடு குறிப்பிட்டுத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டார். தனது இயலாத உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இறுதியில் அவரும் மற்றவர்களும் பயந்தது போலவே மாட்டுப்பட்டுப் போனார்.
அவரை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை சுடுமென்று தெரியவில்லை. பலருக்கு இதுவொரு விடயமேயன்று. மூன்றாந்தரப்பாக நின்று 'அப்பிடியாம், இப்பிடியாம்' என்று விண்ணாணம் பேசிக்கொண்டு அடுத்த 'மேய்ப்பு'க்குக் கிளம்பிவிடுவார்கள்.
வழிநடத்துபவருக்கான ஆபத்தையும் அவரின் மறைப்புத்தன்மைக்கான தேவையையும் நன்கு அறிந்திருந்தும்கூட அதைக்கொண்டே அவரைச் சீண்டி மாட்டுப்பட வைத்தவர்கள் கொஞ்சநேரம் கண்களை மூடி யோசிப்பார்களாக.
===============
*இக்கட்டுரையில் கே.பி என்ற பெயர் மூலமே திரு. பத்மநாதன் குறிப்பிடப்படுவது தற்செயலானதன்று. அப்பெயருக்கான வலு உறைக்க வேண்டும். ஈழப்போராட்டத்தில் இராணுவ வெற்றிகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அழப்பரியது. அப்பங்களிப்புக்கள் யாவும் கே.பி என்ற பெயரூடாகவே சாத்தியமாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனால் இன்று அதே புலத்தில்தான் கே.பி பந்தாடப்பட்டார்.
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், மக்கள் எழுச்சி, மாவீரர், வரலாறு, விமர்சனம்
Tuesday, August 14, 2007
செஞ்சோலைப் படுகொலை - ஓராண்டு நினைவு
கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Sencholai air-strike killed 55, details released
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
S Jeyarubi (Age 20)
___________________________________
நன்றி: தமிழ்நெற்
Labels: ஈழ அரசியல், துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு, வன்னி
Wednesday, June 06, 2007
தொண்டரமைப்புக்கள் மீதான அரச பயங்கரவாதம்
இக்கொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை அமைப்பை அழைப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். பன்னாட்டுக் குழு பற்றிய பேச்சு வருவது இதுதான் முதற்றடவையன்று. ஏற்கனவே தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர்' ரவிராஜ் கொலை, மூதூரில் பன்னாட்டு நிறுவனப் பணியாளர் கொலை என்பவற்றிலெல்லாம் இதே கூத்துத்தான் நடந்தது. வந்தவர்களும் புதைத்த பிணங்களை மீளத் தொண்டியெடுத்து ஏதோ செய்துவிட்டு, இறுதியில் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையென்றுவிட்டுப் போனவர்கள்தாம். இப்போது மீண்டும் பன்னாட்டுக்குழு விசாரணை என்ற கண்துடைப்பு. 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதுபோல வெளிப்படையான உண்மைகளை மறைக்க விசாரணைக்குழு என்ற பித்தலாட்டம் காட்டுவது 'அரசுகளுக்கே' உரிய பொதுமையான தந்திரம்.
இங்கு, பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது தொடர்பில் எமக்கு மாற்றுக்கருத்தும் மிகக்கடுமையான விமர்சனமும் உண்டு. அவை மிகத்திட்டமிட்ட முறையில் தீவிரமான ஓர் அரசியலோடு பணியாற்றுபவை. பெரும்பாலான நேரங்களில் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமான செயற்பாடுகளையே செய்பவை. உலகின் வேறுசில பகுதிகளில் நடந்தது, நடப்பது போல் இவர்களின் வாகனங்கள் வருவதைக்கண்டதும், தேவனின் தூதர்களைக்கண்டதைப்போல் பின்னாலே கத்திக்கொண்டு ஓடுவதும், தெண்டனிட்டுப் பொருட்கள் வாங்குவதும் ஈழத்தில் என்றும் நடந்ததில்லை. அப்படியொரு மயக்கம் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மேல் இல்லாமலிருந்ததற்கு முக்கிய காரணம் "தமிழர் புனர்வாழ்வுக் கழகம்". எல்லா நேரத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிக்கொண்டிருப்பது இவ்வமைப்புத்தான்.
இடப்பெயர்வு நேரங்களில் சில பிளாஸ்ரிக் வாளிகள், பாய்கள், தற்காலிகக் கூடாரங்கள் என்பவற்றை வாங்கியதைவிட, ஈழத்தமிழர்கள் மனமார பன்னாட்டு அமைப்புக்களுக்கு நன்றி சொல்லவேண்டிய ஒரு கடமைப்பாடு உண்டென்றால், அது பொதுமக்கள் கொல்லப்படுவதையும் கொல்லப்பட்ட எண்ணிக்கையையும் உலகுக்கு உறுதிப்படுத்த எங்கள் பகுதியிலிருக்கும் ஒரே சக்தி இவர்கள் என்பதுதான். தமிழர்களின் அவலங்களை இந்த அமைப்புக்கள் சொல்லும்போதுதான் ஓரளவாவது நம்பத் தலைப்பட்டார்கள். ஆனால் அந்தப்பணியைக்கூடச் செய்ய விடாமல் தடுத்துவருகிறது இப்போதைய சிங்கள அரசு. வாகரையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியற்றுப் பட்டினியால் வாடியபோதும், தொடர்ந்த எறிகணைவீச்சில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வசதியற்றுத் தவித்தபோதும், கொத்துக்கொத்தாக குண்டுவீச்சில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், அப்பகுதிக்கான வினியோகத்தைத் தடுத்தது மட்டுமன்றி பன்னாட்டுத் தொண்டுநிறுவனங்களின் செயற்பாடுகளையும் அப்பகுதியில் முடக்கி வைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம். தொண்டுநிறுவனங்களுக்கான முழுமையான செயற்பாட்டுத் தடையை விதித்திருந்தது அரசு. இவர்களும் தங்களுக்கு அங்குச் செல்ல அனுமதியில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருந்துவிட்டார்கள்.
அதேபோல் நீண்டகாலம் தமிழர்பகுதியில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொண்டர்கள் சிலரை கட்டாயப்படுத்தி நாடுகடத்தியது தற்போதைய அரசாங்கம். இதில் மருத்துவக்குழுவொன்றும் அடங்கும். போரினால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஒரு சிறு உதவிதன்னும் கிடைக்கக்கூடாதென்பதில், அங்குள்ள அவலங்கள் வெளியுலகத்துக்குத் தெரியக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இயங்கியது ராஜபக்ஷ அரசு. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தமிழர்புனர்வாழ்வுக் கழகம் மீதும் கைவைத்தது. புனர்வாழ்வுக் கழகத்துக்குரிய அலுவலகங்கள், களஞ்சியங்கள் என்பன அடிக்கடி தாக்கிச் சேதமாக்கப்பட்டதோது அங்கிருந்த பொருட்களும் அரசபடையால் கொள்ளையிடப்பட்டன. வங்கிக் கணக்கிலிருந்த புனர்வாழ்வுக் கழகத்துக்கான இலட்சக்கணக்கான ரூபாய் நிதியைச் சூறையாடியது அரசு. இலட்சம் பேரைப் பராமரித்துக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்துக்கான நிதியைச் சூறையாடியது மூலம் மிகப்பெரும் அவலமொன்றைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது அரசு.
இன்றும் பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களுக்குச் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்படவில்லை. என்னேரமும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை அரசாலும் அரசிலுள்ள கட்சிகளாலும் வெளிப்படையாகவே விடுக்கப்படுகின்றன. பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்கள் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். கடந்தவருடம் மூதூரில் பதினேழு பணியாளர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமுட்பட நிறைய நடந்துவிட்டன. உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசகூலிப்படையான கருணா கும்பலால் தமிழர்புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் பலர் கடத்தப்பட்டு, பின் சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில் மிகுதி அனைவரும் கொல்லப்பட்டனர். அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் யாருமே பணியாற்ற முடியாதபடி உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு எதுவுமே தெரியாதமாதிரி அரசு நடித்துக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஏராளமான சம்பவங்களின் தொடர்ச்சியாக நான்கு நாட்களின்முன் கொழும்பில் வைத்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப்பணியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைகளிலும், சூத்திரதாரிகள் யாரென எல்லோருக்கும் தெரியும். இக்கொலைகள் நீண்டதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமே. கல்வியாளர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், மாணவர்கள் என பலரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரும் கொலைப்பட்டியலோடு அரச இயந்திரம் செயற்படுகிறது. கடந்த ஆவணியில் காணாமற்போன அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தை கொலைசெய்யப்பட்டுவிட்டாரென்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல தமிழரின் சுயநிர்ணயத்துக்காகக் குரல் கொடுத்த பெளத்த பிக்கு ஒருவர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெயர் விவரங்களோடு வெளிப்படையாகவே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்கள். உயிர் ரீதியான மிகப்பெரும் அச்சுறுத்தலை அரசகட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் என்ற ஒரு காரணத்தாலேயே தனது பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் மறைக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறது. அதே காரணத்தைக்கொண்டு சில முட்டாள்களால் அரசாங்கத்தை நல்லதோர் அமைப்பாகச் சித்தரிக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறதோடு, போராடும் தரப்புக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஆயுதத்தைக் கீழே போடுங்கள்; பேசித் தீருங்கள்; அகிம்சை வழிக்கு வாருங்கள்; என்று உபதேசம் செய்யவும் முடிகிறது.
பின்னிணைப்பு:
Tamilnet: ICRC pays homage to slain employees
தொடர்புடையதாக மலைநாடான் எழுதிய இடுகை:
தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..
தன் நண்பன் கொல்லப்பட்டதைக் குறித்து சந்திரன் எழுதிய இடுகை:
மலிந்து போன இறப்புக்கள்........
Labels: ஈழ அரசியல், துயர் பகிர்தல், மக்கள் துயரம்
Thursday, April 19, 2007
மூன்றாம் கட்ட ஈழப்போர்
1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.
இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.
குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.
விழியில்_சொரியும்... |

Labels: ஈழ அரசியல், ஒலி, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர்
Tuesday, March 27, 2007
குடாரப்பு தரையிறக்கச் சமர்
சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி.
ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.
26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.

[சிதைக்கப்பட்ட கவசத்தின் மேல் வெற்றி வீரர்களாக]
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.
அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.

[வரலாற்றுப்புகழ் வாய்ந்த மாமுனைத் தரையிறக்கத்தில் நீருக்குள்ளால் 120 mm கனரகப் பீரங்கியை இழுத்துச்செல்லும் பெண்புலிகள்]
தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு - கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி - கண்டிவீதியில் முகமாலை வரை - கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.
சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர் நினைவு, வரலாறு
Thursday, February 22, 2007
ஐந்தாண்டு நிறைவையொட்டி புலிகள் வெளியிட்ட அறிக்கை
இதையொட்டி விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையின் ஆங்கில வடிவம் இங்குத் தரப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Ceasefire Agreement completes its fifth year
On February 22, 2002, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Government of Sri Lanka (GOSL), entered into the Ceasefire Agreement (CFA) with facilitation by the Royal Norwegian Government. Five years have passed since the signing of this historic agreement by the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Vellupillai Pirapaharan, and the then Prime Minister of Sri Lanka, Ranil Wickremasinghe. Even though today it exists only on paper, it remains a unique document in the search for an end to the national conflict in the island Sri Lanka. Unprecedented in peace efforts in the island, the CFA was formulated with the full support of the international community, transcended the parameters of Sri Lanka’s majoritarian constitution created by the Sinhala people for the Sinhala people which had effectively marginalized the other communities in the island. It recognized Tamil Eelam’s de facto existence, with its unique characteristics: a distinct population; a government comprising a defense force, a police force, a judiciary, a civil administration and other institutions for effective governance of a people, and capability of entering into agreements with other governments with a line of control reflecting the ground reality of the existence of the Tamil homeland demarcated with recognized borders. The CFA recognized the balance of power between the GOSL and the LTTE and was premised on this balance of power.
Since the island gained independence from British colonial rule, the Tamil nation has been subjected to chauvinistic and oppressive rule by successive Sinhala governments. For the first three decades after independence, the Tamil nation’s non-violent resistance to this oppression was met by state violence. Thus, the Tamils’ peaceful struggle was transformed into armed struggle. In all that time, leaders and representatives of the Tamil nation held numerous talks and even signed agreements and pacts with successive Sri Lankan governments. Due to the lack of a balance of power between the two sides and the absence of international participation, all such negotiations failed and the successive Sri Lankan governments unilaterally abrogated all agreements reached. Repeatedly the Tamil people were victims of state deception and duplicity.
It was in the context of the bitter history that the CFA came into being in 2002 with Norwegian facilitation. It was the strong support shown by the international community for this peace effort that gave the confidence to the Tamils in this process. But the international community’s unhelpful engagement in the peace effort has had the effect of encouraging the Sri Lankan state to pursue a military solution to the national question. The international community’s unwillingness to take concrete measures and exert pressure on the Sri Lankan government to abandon its aggression in its pursuit of the military option has contributed to rendering the CFA defunct.
Despite serious and provocative breaches by the Sri Lankan armed forces, the LTTE has exercised considerable patience. During this period of ceasefire, we lost hundreds of our cadres to Sri Lankan military attacks. Throughout the Tamil homeland and in the other parts of the island, civilians, including elected Tamil Parliamentarians, Tamil journalists, Members of Tamil intelligentsia and community activists, are being murdered and have disappeared due to the activities of the State armed forces and state-backed paramilitary forces. In spite of this ground reality, the international community chose to unfairly take punitive measures against the LTTE, seriously undermining the LTTE’s status as an equal party in the negotiation process and thereby weakening the peace process itself. This international bias against the LTTE further strengthened the government’s intransigence and encouraged it to adopt even more hard line positions. The international community’s failure to take concrete action against the Sri Lankan state to stop serious breaches of the CFA or its widespread and systematic human rights violations has contributed to war like conditions in the Tamil homeland.
The failure of the peace process despite the international participation deeply frustrated the Tamil people. To their bitter disappointment, the CFA and the internationally facilitated peace process have, as in all previous peace efforts, failed again. Against this backdrop, over the past five years, the LTTE, heeding the requests of the international community to be patient and flexible, has remained restrained while repeatedly calling for the full implementation of the CFA. Six years ago, in December 2000, the LTTE declared a unilateral ceasefire. It was rejected by the state and the war continued. Five years ago, in December 2001, the LTTE again declared a unilateral ceasefire, which paved the way for the CFA after concerted efforts by the Royal Norwegian government.
The CFA’s overarching purpose was to end the hostilities between the LTTE and the GOSL and to create a conducive atmosphere for peace negotiations by bringing about conditions of normalcy in the war-ravaged Tamil homeland. In every round of the peace talks we emphasized the urgent humanitarian needs of the Tamil people due to three decades of devastating war. We also repeatedly pointed out that the prevailing environment of military occupation and harassment was not conducive to holding talks on resolving the national conflict.
After the CFA came into being, the LTTE participated in several rounds of talks with sincerity and total dedication. In these talks, we urged the GOSL to implement the CFA fully and to jointly take steps to alleviate the humanitarian crisis in the Tamil homeland. It was pointed out, that improving the living conditions of the Tamil people and building confidence and trust should precede discussions on political issues. The CFA requires both parties to the conflict to take necessary steps towards normalizing the lives of people in the Tamil homeland. However, GOSL has failed to comply with these provisions and indeed taken actions to make the situation worse. It continues to occupy the civilians’ homes, schools, and places of worship, denying hundreds of thousands of people the right to return to their homes. These are not only the violations of the CFA but also violations of international humanitarian and human right laws. At each round we raised the issue of a lack of normalcy in the Tamil homeland. The GOSL failed to live up to its pledge at the negotiating table by delaying the implementation and ignoring its obligations. Meanwhile there was no improvement in the humanitarian crisis of the Tamil people, but rather got worse.
Contribution to the deterioration of the situation was the continued support extended by GOSL to paramilitary groups. Article 1.8 of the CFA required GOSL to disarm all paramilitary groups within a specified period of the ceasefire coming into effect. The existence of paramilitary groups and they operating with the support and sponsorship of the Sri Lankan Government, have repeatedly been confirmed by the Sri Lanka Monitoring Mission (SLMM) and, recently, by several other sources, including reports issued last year by the US State Department. The UN Special Representative Alan Rock has also pointed out the collaboration between the state armed forces and paramilitary groups, even citing evidence of the former forcibly recruiting children as combatants for the latter.
From 2002 to 2006, we were engaged in eight sessions of direct talks with the Sri Lankan state under the facilitation of the Royal Norwegian government. In order to address the significant humanitarian crisis of the people in the Tamil homeland, several proposals were put forward and administrative structures were suggested during the early peace talks. All these proposals were later rejected or abrogated by the GOSL. The initial request was for the establishment of an interim administration for the Northeast and it was rejected by GOSL, which cited Sri Lanka’s majoritarian constitution. Subsequently, a purely humanitarian joint structure SIHRN (Subcommittee on Immediate Humanitarian and Rehabilitation in the NorthEast) was created, but was bureaucratically rendered dysfunctional by the GOSL.
Following the failure of the SIHRN, the LTTE submitted a proposal for the Interim Self Governing Authority (ISGA) to the Sri Lankan government in order to resolve the urgent humanitarian needs of our people and take the peace process forward. Unwilling to initiate peace talks based on the ISGA the then President, Chandrika Kumaratunga, dissolved the Parliament. In the subsequent parliamentary election, Tamil people overwhelmingly voted for 22 candidates from the Tamil homeland, who, accepting the LTTE as the authentic representatives of the Tamil nation, contested the election seeking a popular mandate for ISGA. Denying the democratic will of the Tamil people, the newly elected Sri Lankan government also refused to hold talks on ISGA.
Against this backdrop, the island suffered national calamity of unimaginable proportion when a Tsunami struck in December 2004. The majority of the victims were people in the Tamil homeland who had already endured the ravages of war. Thousands of Tamil people died and many more lost their homes and all their possession and they were internally displaced. With no assistance forthcoming from the Sri Lankan state, the LTTE’s military and civilian structures faced up to this humanitarian tragedy with the assistance of international and local NGOs, addressing the immediate evacuation and rehabilitation needs. Six months after the tsunami, with the facilitation of Norway and the insistence of international donor agencies, the LTTE signed an agreement with GOSL to share aid: the Post Tsunami Operational Management Structure (PTOMS). Yet, to the utter dismay of the Tamil people, the GOSL later nullified this purely humanitarian structure, again citing the Sri Lankan constitution. The international community, rather than providing an alternative framework to address the needs of the tsunami victims, simply walked away, leaving the Tamil tsunami victims in a dire situation.
It was in this context that the current Sri Lankan President, Mahinda Rajapakse, assumed power in 2005. Immediately after his term in office began, the shadow war being waged against the LTTE and the Tamil people by Sri Lankan military intelligence wing using the paramilitary groups intensified. A dark phase has begun to unravel in the Tamil homeland; people are being terrorized by cold-blooded killings and ‘disappearances.’ Tamil parliamentarians who spoke out against the gross human rights violations of Sri Lankan armed forces were assassinated. Community representatives, journalists, students, academics, human rights activists are being murdered and ‘disappeared’. In all parts of the Tamil homeland under Sri Lankan military occupation, all sense of normalcy has disappeared in a reign of military terror.
The situation in the Tamil homeland is deteriorating rapidly and the humanitarian and human rights crises are deepening. People in the Tamil homeland are living in traumatic conditions. The continuing bombardments of densely populated civilian areas, including homes, hospitals and schools, are a violation of the Geneva Conventions 4, Article 147 and are thus war crimes. The Sri Lankan military has conducted unprovoked offensives against our forces and occupied our areas in violation of Article 1.3 of the CFA. Even under such grave circumstances we refrained from launching offensive operations and kept ourselves in defensive positions.
Amid this deteriorating situation in the Tamil homeland, in early 2006, talks were held in Geneva concerning the full implementation of the CFA. At the talks, the GOSL promised to implement the CFA and disarm its paramilitary groups. Instead the Sri Lankan military and the paramilitaries intensified the killing of civilians and stepped up their terror campaign. Although a party to the International Convention on Civil and Political Rights (ICCPR), the GOSL refuses to carry out independent, impartial and effective investigations into the killings and disappearances, despite pleas by former UN Secretary General Kofi Anan, and the UN High Commissioner for Human Rights, Louis Arbor who condemned these crimes. Amnesty International report of the Allaipiddy massacre in May 2006 cited credible evidence that the Sri Lankan navy was responsible. The continued failure of the international community, despite the volume of independently gathered evidence, to take effective steps to curb the state’s abuses, is turning the Tamil homeland into an Asian Darfur.
While crimes against humanity are taking place in the Tamil Nation, the LTTE, with immense patience, repeatedly reiterated the need for full implementation of the CFA. At this critical juncture, we accepted the international community’s request and participated in a second round of talks with the GOSL in October 2006 under the auspices of the Royal Norwegian Government and hosted by Government of Switzerland. In this second round of talks in Geneva, we demonstrated utmost flexibility and in agreeing to hold talks on the core issues even while the humanitarian crisis of the Tamil people have not been improved.
We pointed out the suffering of the people and humanitarian crisis in Jaffna caused by the closure of A-9 highway, the only land route linking the peninsula with the rest of the island. The LTTE pointed out the closure of A-9 had set up a new ‘Berlin Wall’ behind which approximately 600,000 Tamil people were under the occupation of 60,000 Sri Lankan troops. The Sri Lankan government’s adamant refusal to open the A9 highway under any circumstances led to the failure of the talks. The closure of the A9 is a standing breach of Clause 2.10 of the CFA. The deliberate withholding of food and medicine from the civilian population is also a grave breach of article 147 and also violates articles 55 and 59-63 of Geneva Convention IV.
At the talks the GOSL while refusing to discuss humanitarian plight of the Tamil people, it insisted on discussing the core issues relating to the national question. However when it was asked for its proposal, there was none, claiming that it had only recently signed the Memorandum of Understanding (MOU) between the two main parties in Colombo which it described as a “significant step” to find consensus in southern Sri Lanka. Today this much touted MOU has achieved nothing having been undermined by the GOSL itself.
Today the CFA completes its fifth year in existence. Article 2 of the CFA contains specific provisions barring the harassment of civilians and requiring civilian areas such as residential homes, schools, places of worship and public buildings returned to the people with the objective of normalizing the situation in the Tamil homeland. Yet, at present the Sri Lankan military occupies a third of the residential areas, leaving more than 300,000 people to suffer in IDP camps. This action breaches Article 46 of paragraph 2 of the Hague Convention on Land Warfare, which is considered the customary international law, prohibiting confiscation of private property. Guidance can also be drawn from article 17 of the second Additional Protocol II to the Geneva Convention, which prohibits the forcible movement of civilians. Moreover, in the current international context, no peace agreements whether it be in Kosovo, or Bosnia, or Brundi, or Georgia, or Macedonia deny the right to return of the people in the pretext of military security.
The worsening of the humanitarian and the human rights conditions despite the 5 years of the CFA has pushed the Tamil people to the brink. In these five years more than 1500 civilians have been killed and over 500 ‘disappeared’ and approximately 300,000 people still live in the IDP camps and welfare centres. Another 210,000 people were displaced in Sri Lankan military operations last year.
In this backdrop, only a neutral and constructive role by the international community can contribute to a just and lasting peace. Any involvement that is partial and attempts to marginalize or weaken one side will only lead to an irreversible process of deterioration. The parity of status and balance of forces between conflict parties in a negotiation process is essential for the survival of a peace agreement. In the case of CFA between the LTTE and GOSL, the need to maintain parity of status and balance of power was later ignored, leading to the CFA being undermined and, thereby, resulting in the disruption of the peace talks. Canada and the European Union, at the behest of the Sri Lankan Government, declared the LTTE, which was participating in the peace process as the authentic representative of the Tamil nation, as a terrorist outfit. These actions served to undermined the peace process, encouraging the Sri Lankan Government to take a hard line approach and to escalate its military offensives. Human rights violations on an unprecedented scale and military assaults and occupation have rendered the CFA meaningless.
The landslide victory of the Tamil National Alliance party, which contested the 2004 general election on the platform that LTTE was the sole representative of the Tamil nation, clearly demonstrated the democratic will of the Tamil people. The LTTE is a national liberation movement, which has a long history of struggle for the Tamil people’s right to self- determination. The will of the Tamil people is to determine their own political future. In contrast to current international practice with respect to national conflicts in other parts of the world, the international community’s insistence on a solution that does not infringe on the territorial integrity and sovereignty of Sri Lanka is deeply frustrating for the Tamil people. The denial of the Tamil people’s will is itself a breach of the law of self-determination. The international community has not rejected, for example, the South Sudan Machkos Protocol facilitated by US, UK, Norway and Italy on the basis it is affecting the sovereignty of Sudan.
Nor has the international community questioned the Serbia-Montenegro agreement and the recent proposal on the future of Kosovo on the basis these contravene Serbian sovereignty. The Papua New Guinea- Bougainville Agreement that was not opposed by the international community on the basis of safeguarding territorial integrity and sovereignty. In all these cases the peoples concerned have exercised their right to self-determination and sovereignty.
The marginalisation of the 2002 CFA, which would have been a step towards just peace, has destroyed the confidence of the Tamil people and their expectations regarding future peace efforts. The Sri Lankan government’s ongoing war of aggression, aimed at the subjugation of the Tamil people under the guise of ‘war on Terrorism’, will add to the bloodstained pages of the island’s history. It has also compelled the Tamil people to resume their freedom struggle to realize their right to self - determination and to achieve statehood.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி: Tamilnet.com
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், வரலாறு
Wednesday, February 14, 2007
ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?
இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன.
இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம்.
ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்தபிறகு ஏதோ நடக்கப்போகிறது என்றும் ஒருகதை.
அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல்கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்தவேண்டியதுதான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்கள் இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததைப் பாராட்டி "சர்வதேசம்" விருது வழங்கும்; தமிழீழத்தை அங்கீகரிக்கும்; எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற கனவோடு ஏராளம் பேர் உலாவுகிறார்கள்.
ஒன்றில் நடப்பவற்றைக் கொண்டு ஊகிக்க வேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து பாடம்படிக்க முற்பட வேண்டும்.
இவை எதுவுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளையும் புரட்டுக்களையும், நம்பிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருப்பது சரியில்லை.
ஐந்தாண்டுகள் வரை பொறுமை காக்கவேண்டுமென்ற கடப்பாடோ விருப்பமோ புலிகளுக்கில்லை. அப்படி பொறுமை காப்பதில் எந்த அனுகூலமுமில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். மட்டமாக ஒரு காலத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஒரே வசதி, எதிர்காலத்தில் "நாங்கள் ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். (இவ்வருட மாவீரர் தின உரையில் முக்கிய இடம்பிடிக்கப்போகும் வசனமிது) அந்தவசனம் சொல்லத்தான் காலம் கடத்தினார்கள் என்பதற்கு, அப்படிச் சொல்வதால் என்ன கிடைக்குமென்று யோசிக்க வேண்டும்.
இவ்வளவுகாலம் நீடித்தது, காலத்தின் கட்டாயமேயன்றி ஐந்தாண்டு கணக்கிற்காக அன்று.
2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தைத் தீவிரப்படுத்த எண்ணியிருந்ததாகவும் 2004 மார்கழி கடற்கோள் அனர்த்தத்தால் அது சாத்தியப்படவில்லையென்றும் 2005 மாவீரர்நாள் உரையிலேயே சொல்லப்பட்டாயிற்று.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" மூன்றாண்டுக் கணக்குச் சொல்லித்திரிந்திருப்பார்கள்.
2006 இலேயே போர் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. புலிகள் நினைத்தபடி எதிரணி அரசியலில் எல்லாம் நடந்துகொண்டிருக்க, களத்தில் ஏற்பட்ட ஒரு பிசகால் நிலைமை தமிழர் தரப்புக்குப் பாதகமாக மாறியது. காலம் இழுபட்டது. அதற்குப்பின்னும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
எல்லாம் சரிவந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" நான்காண்டு கணக்குச் சொல்லியிருப்பார்கள்.
'சர்வதேசம்' எங்கள் பக்கம் திரும்பும், எங்களை அங்கீகரிக்கும் என்று இப்போது நம்பிக்கை கொள்வது வீண்வேலை. அதுவும் களத்தில் பின்னடைவுளைச் சந்தித்துள்ளதாக தோற்றப்பாடுள்ள இன்றைய நிலையில் அறவே சாத்தியமில்லை.
எங்களை அங்கீகரிக்கவும், ஆதரவளிக்கவும் எந்தக்கடப்பாடும் அவர்களுக்கில்லை. கடப்பாடுள்ள விடயத்திலேயே அவர்கள் சரியாக நடக்கவில்லை.
இன்று இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் நோர்வேக்கு உள்ள கடப்பாடு என்ன? அவர்கள் அதன்படி நடக்கிறார்களா? என்று பார்த்து, அதன்வழி 'சர்வதேச'த்தையும் பொருத்திப் பார்க்கலாம்.
பலவற்றுக்குப் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுள்ள நோர்வே சத்தம்போடாமல் தானுண்டு, தன் பாடுண்டு என்று இருக்கிறது. யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் கதையைக் கேட்கவே வேண்டாம்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசதரப்பால் தொடர்ந்து நடத்தப்பட்ட மீறல்கள் குறி்த்து அவர்களுக்கு எக்கவலையுமில்லை. விலகுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து தன் படைகளைவிலக்கி மக்களை இயல்புக்குத் திருப்புவதைச் செய்யாத அரசுமேல் அவர்கள் எக்குற்றச்சாட்டையும் வைக்கமாட்டார்கள். மக்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பார்கள். (இவை ரணில் காலத்திலேயே நடந்துவிட்டன). அரசு மக்கள்மேல் எறிகணை மழை பொழிந்து கொத்துக் கொத்தாகப் பலிகொண்டபோது, நோர்வே (சர்வதேசமும்) சொன்ன தீர்வு, மக்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிப்போகச் சொன்னதுதான். கொல்லப்பட்டடவர்கள் மக்கள் தான் என்பதையும் அவர்களது எண்ணிக்கையையும் சொல்வதைத்தாண்டி இந்தப் படுகொலைகள் தொடர்பில் நோர்வே (சர்வதேசமும்) செய்தது வேறொன்றுமில்லை.
ஒவ்வொருமுறை படுகொலை நடக்கும்போதும் சம்பந்தமேயில்லாமல் புலிகளையும் அதற்குள் இழுத்து ஓர் அறிக்கை விடுவதன்மூலம் பயங்கரவாத அரசுக்கு மேலும்மேலும் ஊக்கமளித்ததுதான் இந்த நோர்வே உட்பட்ட சர்வதேசம் செய்தது.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகப் பார்த்தால், அதிலும் இவர்கள் செய்தது படுகயமைத்தனம்தான்.
மூதூர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் சில மணித்துளிகளில் நோர்வே அறிக்கை விடுகிறது, "உடனடியாக பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும்" என்று. அதற்குமுன்பே அரசபடைகள் மாவிலாறு மீது படையெடுத்திருந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதன்பின் அரசபடைகள் சம்பூர் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று சம்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது நோர்வேயிடமிருந்து அறிக்கை வரவில்லை. படையினர் பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று, சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்த அறிவித்தலும் வரவில்லை.
வாகரையும் அப்படியே; கஞ்சிக்குடிச்சாறு்ம அப்படியே.
சமாதான முயற்சிகள் நடப்பதாக, பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் காட்டிக்கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த கரிசனையுமில்லை.
அப்பட்டமான நில ஆக்கிரமிப்புகள் நடந்து, பல்லாயிரம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உணவுகள்கூட மறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபடி திறந்திருக்கவேண்டிய A-9 பாதை மூடபட்டிருந்த நேரத்திலும் - எதுவுமே நடக்காதது போல் அடுத்த சுற்றுப்பேச்சுக்கு ஒழுங்கு பண்ணுவதில் மட்டும் குறியாயிருந்த - அப்படி இருதரப்பையும் மேசையில் கொண்டுவந்து இருத்திவிட்டால் எல்லாம் முடிந்தது என்று சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்ட நோர்வே (உட்பட்ட சர்வதேசம்) பற்றி நாமின்னும் அறியவில்லையா?
தான் பதில் சொல்லவேண்டிய கடப்பாடுள்ள விடங்களுக்கே எந்தவித சலனமுற்று, சாந்தமாக இருக்கிறது நோர்வே.
இந்நிலையில் எந்தச் சம்பந்தமுமில்லாத, எந்தக் கடப்பாடுமில்லாத 'சர்வதேசம்' என்று நாம் சொல்லும் சக்தி என்ன கிழிக்கப்போகிறது?
இன்று தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கெதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத சர்வதேசம் எமது உரிமைப்போராட்டத்தை "இப்போது" அங்கீகரிக்குமென்பது - அதுவும் ஐந்துவருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததென்ற ஒரே காரணத்துக்காக அங்கீகரிக்குமென்பது சுத்த மடத்தனமல்லவா?
ஐந்து வருடங்கள் ஒருதரப்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் அவர்களின் நிலம் அவர்களுக்கே என்று பட்டா எழுதும் சட்டமேதும் சர்வதேசம் என்ற சக்தி இயற்றி வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோட்பாட்டுக்குட்பட்டதைக் கூட அவர்கள் செய்யவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் பாடமாகப் படிக்க வேண்டாமா?
சுயநிர்ணயம் தொடர்பில் தனியாகப் பிரிந்து செல்லும் அதிகாரம், இடைக்கால நிர்வாகம், பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு என்று 'சர்வதேசம்' ஏற்படுத்திவைத்த - பல இடங்களில் செயற்படுத்திய நடைமுறையைக் கூட ஈழத்தவர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? ஏன்?
இவர்களுக்குப்பிடித்தால் நாட்டைப் பிரிப்பார்கள்; இல்லையென்றால் ஒட்டுவார்கள்.
சர்வதேச மனிதாபிமானத்துக்கு பல எடுத்துக்காட்டு்க்கள் இருக்கின்றன.
மிக அண்மையில் நடந்த லெபனான் பிரச்சினையிலிருந்து கூடவா நாங்கள் பாடம் படிக்கவில்லை? ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு வருவதைவிட பலநூறு மடங்கு உத்வேகத்துடன் லெபனானில் நடப்பவை உலகுக்கு வெளிவந்தன. அந்தப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. அப்படியிருந்தும் அம்மக்களை யார் காப்பாற்றினார்?
முடிவாக - ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம் என்ற காரணத்துக்காக சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும்; ஆதரவு தரும்; சர்வதேசத்தில் எமக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்பது சுத்த முட்டாள்தனமான பிதற்றல்.
ஆதரவு, அங்கீகாரம் போன்ற பம்மாத்துத் தோற்றமொன்று வருவதானாற்கூட அதைத்தீர்மானிக்கும் காரணி வேறுதான்; ஐந்தாண்டு நிறைவன்று.
______________________________
இங்கே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளையோ நிகழ்வுகளையோ கூட்டத் தொடர்களையோ நான் தவறென்று சொன்னதாக யாரும் கருதத்தேவையில்லை. அவை கட்டாயம் தேவைதான். அரசதலைவர்களை விடவும் வேற்றின மக்களிடத்தில் எமது நியாயங்களைச் சொல்வது முக்கியம். தொடர்ச்சியான கவன ஈர்ப்பைச் செய்துகொண்டிருப்பது முக்கியம். புலத்திலிருக்கும் எல்லோரும் ஒரேயணியில் திரள்வதற்கும், இளையோரிடத்தில் ஒன்றிப்பும் பங்கேற்றலும் அதிகரித்தலுக்கும்கூட இவை முக்கியம்.
ஒரு நோக்கத்துடனான செய்பாடு வேறு; அது நிறைவேறும் முன்பே அதீத நம்பிக்கை கொண்டு பகற்கனவு காண்பது வேறு.
இந்தியா எமது பக்கமென்று புழுகித்திரியும் வேளையிலேயே அது நசுக்கிடாமல் தனது வழமையான பணியைச் செய்துகொண்டிருக்கிறது.
அதற்காக, 'இந்தியா இனிச்சரிவராது' என்று பேசாமல் இருந்துவிட முடியாது. அரசியல் சந்திப்புக்கள், முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கட்டும். ஆனால் அதன் தற்போதைய நிலைப்பாட்டை, செயற்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டு, கனவுகள் காணாமல் இருப்பதும் முக்கியம்.
_____________________________
ஐந்தாண்டு நிறைவின்பின் பெரியதொரு தாக்குதல் புலிகளால் நடத்தப்படுமென்ற கதை பரவலாக உள்ளது.
அது சரிதான். ஆனால் இந்த ஐந்தாண்டு நிறைவுக்காகத்தான் தாக்குதலை ஒத்திப்போட்டுள்ளார்கள்; நிறைவுநாள் வந்ததும் பாயப்போகிறார்கள் என்ற தோற்றத்தை பலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
இப்போதுள்ள தோற்றப்படி ஐந்தாண்டு நிறைவுக்கு அடுத்தநாள் புலிகள் கட்டாயம் தாக்குதல் தொடங்கப்போகிறார்கள் என்ற நினைப்புடன்தான் பலர் திரிகிறார்கள். அன்றிரவு நித்திரை கொள்ளாமல் செய்திக்காகக் காத்திருக்கப் போகிறவர்கள் எத்தனைபேரோ தெரியாது. அது நடக்காத பட்சத்தில் மக்கள் சலிப்பூட்டப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் இக்கதையைக் கட்டிவிட்டவர்கள்தாம் காரணமாக இருப்பார்கள்.
இனி, இராணுவ ரீதியில் பலமானதொரு தாக்குதல்தான் அடுத்த நடவடிக்கை என்ற முடிவுக்கு தமிழர்தரப்பு வந்தாயிற்று. அதை நிகழ்த்த ஐந்தாண்டு நிறைவென்பது ஒரு காரணமேயன்று. ஆட்பலத்திரட்டல் உட்பட பலவேலைத்திட்டங்களின் பின்தான் அது நிகழ்த்தப்படும். ஏற்கனவே நடந்த சில தவறுகள், இழப்புக்களைச் சீர்செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் இடங்களேதும் கைப்பற்றாமல், மாறாக இழக்கப்பட்டு, எண்ணூற்றுச் சொச்சம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தவறுகள் களையப்பட்டு, எல்லாம் சீர் செய்யப்பட்டு, மிகுந்த ஆயத்தத்தோடும் எச்சரிக்கையோடும்தான் தாக்குதல் முயற்சியில் இறங்குவார்கள்.
சும்மா வெளியிலிருந்து கொண்டு 'ஏன் இன்னும் அடிக்கேல?', 'அஞ்சு வருசம் முடிஞ்சு தானே?' என்ற புலம்பல்களுக்காக அங்கே தாக்குதல் செய்ய முடியாது.
களத்திலிருக்கும் மக்களும் களத்தை நடத்துபவர்களும் (மட்டும்)தான் அதைப்பற்றித் தீர்மானிக்க முடியும்.
அவர்கள் எப்போது செய்வார்களோ அப்போது செய்துகொள்ளட்டும்.
புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி.
____________________________
நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், வன்னி, விமர்சனம்
Wednesday, February 07, 2007
கெளசல்யன், சந்திரநேரு நினைவு தினம்
07.02.2005 அன்று வன்னியிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த இவர்களின் வாகனம் மீது புனானைப் பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவத் தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் கெளசல்யன், சந்திரநேரு ஆகியோரோடு மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ஆம் லெப். விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
லெப்.கேணல் கெளசல்யன் அவர்கள் சுனாமி அனர்த்தத்தின்பின்னான கிழக்கு மாகாண மீள் கட்டமைப்புக்கு அரும்பங்காற்றியவர். தமிழ் - முஸ்லீம் உறவைச் சீர்செய்ததில் முக்கிய பங்கு இவருக்குண்டு. மிகச்சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த இவரைத் தீர்த்துக்கட்டுவதில் எதிரிகள் மிக மும்முரமாக இருந்தார்கள்.
இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவுக்கு, பின்னர் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியத்துக்காக இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த அனைவருக்கும் எமது அஞ்சலி.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், நினைவு, மாவீரர்
Sunday, February 04, 2007
தியாகி திருமலை நடராஜன் நினைவு
1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், நினைவு, மக்கள் எழுச்சி
Monday, January 01, 2007
"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்
கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.
ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.
1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.

தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.
இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.
புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.
கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.
இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.
நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்
2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.
மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.
யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.
இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.
__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.
இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.
___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.
________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"
தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், ஈழ இலக்கியம், நினைவு, வரலாறு
கிளாலிப் படுகொலையும் அது சார்ந்தவையும்
1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.
முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.
***
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.
முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.
இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.

[பெரிதாய்ப் பார்க்க படத்திற் சொடுக்கவும்.]
தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.
இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.
26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.


1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.
அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.
_______________________
படங்கள்: அருச்சுனா, Google
Labels: அனுபவம், ஈழ அரசியல், மக்கள் துயரம்
Sunday, December 17, 2006
திருச்சித்தமிழனுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று "அப்துல் ரவூப்" என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.
இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.
இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.
இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு 'இனி' என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.
"சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா" என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது.
எம் நிலைப்பாடும் அதுவே.
ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை.
திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஆதரவாளர், ஈழ அரசியல், செய்தி, நினைவு
Monday, December 04, 2006
ஜெயசிக்குறு நிறைவுநாள்
19.05.1997 அன்று சிங்களத்தில் 'ஜெயசிக்குறு' (தமிழில் வெற்றிநிச்சயம்) என்று பெயரிடப்பட்டு மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழியாகப் பாதை கைப்பற்றல் என்பதே அதன் இலக்கு. இன்று சர்சைக்குள்ளான ஏ-9 நெடுஞ்சாலைதான் அந்தப்பாதை. தொடக்கத்தில் மூன்றுமாத காலத்துள் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டுத் தொடங்கப்பட்ட நடவடிக்கை இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்டு இறுதியில் கைவிடப்படுவதாக 04.12.1998 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான மோதல்கள் பலவிடங்களில் நடந்தன. ஏ-9 நெடுஞ்சாலையைத்தான் கைப்பற்றுவது என்ற நோக்கிலிருந்து சாத்தியப்பட்ட எவ்வழியாயினும் சரிதான் என்ற நிலைக்கு அரசு வந்து பலமுனைகளில் பாதைதிறக்க முயற்சித்து முடியாமற்போனது.
இக்காலத்தில் சில ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர், மேலும் சில படையினர் காயமடைந்தனர். ஏராளமானோர் இராணுவத்தைவிட்டுத் தப்பியோடினர்.
இக்காலகட்டத்தில்தான் புலிகளின் போரிடும் ஆற்றல் அபரிதமான வளர்ச்சியடைந்தது.
தொடக்கத்தில் மெதுமெதுவாகப் பின்வாங்கிவந்து ஒருகட்டத்தில் நிலையான பாதுகாப்பரணை அமைத்து மாதக்கணக்கில் முறியடிப்புச்சமரை நடத்தினர்.
வன்னியை இனிமேலும் விட்டுக்கொடுப்பதில்லையென்ற ஓர்மத்தோடு போராடினர்.
இடைப்பட்ட கால்ததில் கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் டிசெம்பர் நாலாம்நாள் 'ஜெயசிக்குறு' நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து 'றிவிபல' என்ற பெயரில் ஒட்டுசுட்டான் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. ஒருதுப்பாக்கி வேட்டுக்கூட தீர்க்கப்படாமல் ஒட்டுசுட்டான் மண் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டரை ஆண்டுகள் நடத்தப்பட்டுக் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளையும், மேலதிகமாக பல பகுதிகளையும் புலிகள் ஐந்தேநாளில் படையினரிடமிருந்து மீட்டெடுத்தனர் என்பது வரலாறு.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரமான பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு
_________________________________________________
டிசெம்பர் ஐந்தாம்நாள்.
யாழ்ப்பாணத்தில் ரத்வத்த சிங்கக் கொடியேற்றி தமிழர்மீதான தமது வெற்றியைப் பறைசாற்றியநாள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென்று 'றிவிரச' என்றபேரில் பாரிய படையெடுப்பைச் செய்த படையினர், மாவீர்நாளுக்குள் யாழ்நகரைக் கைப்பற்றி பிரபாகரனின் பிறந்தநாளன்று அல்லது மாவீரர்நாளன்று கோட்டையில் கொடியேற்றுவது என்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அத்திட்டம் கைகூடாமல் டிசெம்பர் ஐந்தாம்நாள் யாழ்.கோட்டையில் சிங்கக்கொடியை ஏற்றி வெற்றிமுழக்கமிட்டனர்.
அவ்வகையில் இதுவொரு கரிநாள்.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, வன்னி
Wednesday, November 29, 2006
தமிழீழ மாவீரர்நாள் - விளக்கமும் வீடியோவும்
இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது.
புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று.
இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபாகரனின் உரையையும் அவரின் பிறந்தநாளோடு தொடர்புபடுத்தி எழுதி வருகிறார்கள்.
இவர்கள் தெரியாமற் செய்கிறார்கள் என்றில்லை, மாறாக வேண்டுமென்றே திரிபுபடுத்திச் சொல்லி ஒருவகை இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பைச் செய்ய கருத்துரீதியில் இவர்களிடம் இருக்கும் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடே இவ்வகையான போக்கிரித்தனமான திரிப்புக்கள்.
இதற்கு முன்னாள் தளபதி கருணாகூட விதிவிலக்காகவில்லை.
அவரின் இவ்வருட உரையில் பிரபாகரனின் பிறந்தநாளைக்குரிய நிகழ்வாக மாவீரர்நாளைச் சித்தரித்திருக்கிறார்.
பிரபாகரின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம் திகதி. அதாவது மாவீரர்நாளுக்கு முதல்நாள்.
பிரபாகரன் பிறந்ததையும் முதற்போராளி சங்கர் வீரச்சாவடைந்ததையும் மாற்ற முடியாது. அவை அந்தந்த நாட்களேதாம்.
தமது அமைப்பிலிருந்து வீரச்சாவடைந் முதற்போராளியான சங்கரின் நினைவுநாளையே மாவீரர்நாளாக புலிகள் பிரகடனப்படுத்தி இன்றுவரை அனுட்டித்து வருகின்றனர்.
முன்பு சிலவருடங்கள் நள்ளிரவில் தீபமேற்றி நடத்தப்பட்ட நிகழ்வு பின்னர் 27 ஆம் நாள் மாலை 6.05 க்கு மாற்றப்பட்டது. அது சங்கர் வீரச்சாவடைந்த நேரம்.
_____________________________________________
புலிகளின் முதற்போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் பற்றிய சிறு விவரணமும் அவர்பற்றியும் அவரின் சாவு பற்றியும் தலைவர் பிரபாகரன் வழங்கிய நேர்காணலும் சிறு வீடியோப்பதிவாக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள வீடியோவில் இவ்வாவணத்தைப் பாருங்கள்.
இங்குப் பார்க்க முடியவில்லையென்றால் நேரடியாக அந்தப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=0C-DzUdEpVw
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், ஒலி, ஒளி, கலந்துரையாடல், மாவீரர், வரலாறு
Monday, November 27, 2006
மாவீரர்நாள் உரை- வீடியோ
மாவீரர்நாள் உரை - வீடியோ
நன்றி: http://www.tamilflame.com
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், ஒளி, மாவீரர், வரலாறு
Monday, November 20, 2006
புலிகளின் குரல் - பதினாறாண்டு நிறைவு.
இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது.
அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது.
பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள்.
அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத் தொடங்கினார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர் நாள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1989. அப்போது 'மாவீரர் வாரம்" என்று ஒருவாரம் நினைவுகூரப்படும். அவ்வாரத்தின் இறுதிநாள்தான் மாவீரர் நாள் ஆகும்.
அதன்படி நவம்பர் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இவ்வாரம் நினைவுகூரப்படும். முன்பு மாவீரர் நாள் தீபம் ஏற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்து பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டது.
1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரம் தொடங்கும்போதுதான் புலிகளின் குரல் வானொலி சேவையும் தொடங்கப்பட்டது. 21.11.1991 அன்று தொடங்கப்பட்ட புலிகளின் குரல் வானொலிச் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம்பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப்ட்டதுடன் காலைச் சேவையும் இடம்பெறுகிறது.
அருமையான நிகழ்ச்சிகள் பல இவ்வானொலியில் ஒளிபரப்பப்பட்டன. பல படைப்பாளிகளின் முதற்களமாக இவ்வானொலி நிகழ்ச்சிகளே இருந்தன. பலரை வளர்த்துவிட்ட பெருமை இவ்வானொலிக்குண்டு.
தமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் இவ்வானொலி செய்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்களை இவ்வானொலி மூலமே வழங்கினர் புலிகள். இதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள் -3 தொடங்கியபோது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி சமர் செய்து நிலங்களை மீட்க இவ்வானொலியே உதவியது. எவ்வெவ் பகுதி மக்கள் எங்கெங்கு செல்லவேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ்வானொலி மூலம் வழங்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.
சிறிலங்காப் படையினருக்காகவும் சிங்கள மக்களுக்காகவும் புலிகளின்குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப்பட்டது.
புலிகளின் குரல் சேவை கடந்துவந்த பாதை மிகமிகக் கடுமையானது. அடிக்கடி விமானத்தாக்குதலுக்கும் எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது வேறிடம் என்றநிலையில்தான் இச்சேவை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து தென்மராட்சியில் கிடைத்த நேரத்தில் அவசரமான வீதிக்கரையிலேயே வைத்து ஒலிபரப்புச் செய்தார்கள். வன்னிவரும்வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.
வன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்துப்பட்ட சம்பவம்கூட நடந்தது.
பலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளானாலும் தப்பிப்பழைத்து தொடர்நது ஒலிபரப்பு நடைபெற்று வந்தது. நிறையத் தடவைகள் இடம்மாறியிருந்தது புலிகளின்குரல். யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்து வந்தது புலிகளின்குரல். அண்மையில் கொக்காவிலில் சிறிலங்கா வான்படை அக்கோபுரத்தின்மீது தாக்குதல் நடத்தி அதை முற்றாக அழித்திருந்தது.
கடும் சவால்களை எதிர்கொண்டு போராட்டத்தில் காத்திரமான பங்காற்றி வந்த "புலிகளின் குரல் நிறுவனம்" இன்று தனது பதினாறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நீண்ட இக்கடின பயணத்தில் தோளோடு தோள் நின்று உழைத்த கலைஞர்கள், ஊழியர்கள், போராளிகள் அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
தொடர்ந்தும் அவர்கள் தம் பணியைத் திறம்பட செய்ய வாழ்த்தும் ஆசியும்.
புலிகளின் குரலின் இணையமுகரி: http://www.pulikalinkural.com
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், நினைவு, வரலாறு
Monday, October 23, 2006
இருகட்சிக் கூட்டு - மிளகாய் அரைப்பு
சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முற்பட்டுள்ளார்கள்.
இனப்பிரச்சினை தொடர்பில் இரு கட்சிகளுக்குமே பெரியளவில் வேறுபாடு எதையும் காணமுடியாது. தமிழின அழிப்பு என்று எடுத்துக்கொண்டால் சுதந்திரக்கட்சியும் சரி, ஐக்கிய தேசியக்கட்சியும் சரி ஏட்டிக்குப்போட்டியாக சளைக்காமற் செயற்பட்டுள்ளன. கடந்த அறுபதுவருட வரலாற்றில் இருகட்சியும் ஒரேகொள்கையுடன்தான் இனப்பிரச்சினையை அணுகின.
இப்போது அதே இருகட்சிகளும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளதான தோற்றத்தைத் தருகிறார்கள்.
இதை 'வரலாற்று முக்கியத்துவமானது' என்று சொல்பவர்கள் சொல்லிக்கொள்ளும் ஒரு காரணம், இதுவரை ஒருகட்சி கொண்டுவரும் தீர்வை எதிர்க்கட்சி எதிர்த்துக்கொண்டிருந்தது, இனிமேல் அப்பிடியில்லாமல் இருகட்சிகளும் ஒருமித்து அதைப் பாராளுமன்றில் நிறைவேற்றுவார்களாம்.
தற்போதைய நிலையில் ஒரு தீர்வை எதிர்க்க எதிர்க்கட்சி தேவையில்லை. ஒரு வழக்குப் போதும். பேச்சுவார்த்தையைத் தோல்விக்குள்ளாக்கவும் தமிழருக்கான நியாயத்தைக் கிடைக்கவிடாமற் செய்யவும் சிங்களப் பேரினவாதம் பயன்படுத்துவது நீதித்துறையைத்தான். குறைந்தபட்சம் இரு வழக்குகளில் நீதித்துறை இதை நிரூபித்திருக்கிறது.
முதலாவது சுனாமிப் புனரமைப்புக்கான பொதுக்கூட்டமைப்பு தொடர்பிலான வழக்கில்.
இரண்டாவது வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பான வழக்கில்.
இன்றைய நிலையில் ஊழல்மிக்க, பேரினவாதம் புழுத்துப்போன நிலையில்தான் சிறிலங்கா நீதித்துறை உள்ளது.
புலிகளும் அரசும் பேசி எடுக்கும் எந்த முடிவையும், தீர்வையும் மிக இலகுவாக சிறிலங்கா நீதித்துறையால் தடைசெய்ய முடிகிறது. அந்தத் துணிவில்தான் குறைந்தபட்ச விட்டுக்கொடுப்பையாவது செய்ய சிங்களத்தரப்பு முன்வருகிறது.
நியாயமான தீர்வொன்றை எட்டுவதாக இருந்தால் முதலில் இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். அதற்குரிய பெரும்பான்மை இப்போது கிடைத்திருக்கும் நிலையிற்கூட இவர்கள் இதைச் செய்யப்போவதில்லை. அரசியலமைப்பை தமிழருக்கு நியாயம் வழங்கும் அடிப்படையில் மாற்றுவதென்பது சிங்களத் தலைமையால் நினைத்துப்பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.
சரி, மிக இலகுவான கேள்வியொன்றைக் கேட்போம்.
இருகட்சிகளும் கூட்டுச் சேர்ந்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதிக்கும்படி தற்போதைய ஆளுங்கட்சிக்கு ரணிலின் கட்சி அறிவுறுத்துமா? வடக்கு - கிழக்கில் அரசபடை நிகழ்த்தும் விமானத்தாக்குதல்களை நிறுத்தும்படி ஓர் அறிக்கையாவது வெளிவிடுமா? கொழும்பில் அரசவன்முறைக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் தமிழர்களைக் (சந்தேகமில்லாமல் இவர்கள் அனைவரும் ஐ.தே.க வின் வாக்கு வங்கிகள்) காப்பாற்ற ஏதாவது செய்வார்களா? முழுக்க முழுக்க அரச ஒத்துழைப்போடு கடத்தப்படும், பணயக் கைதியாக்கிச் சூறையாடப்படும் தனது கட்சிக்கான நிரந்தர வாக்காளர்களாகிய தென்னிலங்கைத் தமிழர்களைக் காக்க ஏதாவது செய்வார்களா?
மாட்டார்கள். செய்யவே மாட்டார்கள். செய்யவும் முடியாது.
குறைந்தபட்சம் யாழ்ப்பாண மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றக்கூட ரணிலின் ஐ.தே.க உருப்படியான முயற்சி செய்யவில்லை, செய்யாது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்கமாக அறிவித்தவர்களைக் கொண்ட கட்சியுடன், அந்த ஒப்பந்தத்தை ஏற்று கையொப்பமிட்ட ரணிலும் அவர் கட்சியும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். அப்படியானால் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இரு கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து வந்துவி்ட்டதா? யார் தமது முடிவை மாற்றினார்கள்?
சரி, இனப்பிரச்சினை விதயத்துக்கே வருவோம்.
விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன்தான் இவர்கள் தீர்வு பற்றிக் கதைக்க வேண்டும். புலிகளுடன்தான் பேசி ஒரு தீர்வு காணவேண்டும்.
புலிகளுடன் பேசுவதென்றால் அவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
அதன்படி சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளைவிட்டுப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகள் அப்படியே பேணப்பட வேண்டும்.
எனவே (மக்களுக்கான அத்தியாவசியப் பிரச்சினைகள், மனிதாபிமானப் பிரச்சினைகளை அடுத்து) இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மிகமிக அவசியமான, அவசரமான முதலாவது நடவடிக்கை என்னவென்றால் இராணுவம் ஆக்கிரமிப்பைக் கைவிட்டுப் பழைய நிலைகளுக்குத் திரும்புதல்தான்.
இப்போது கேள்வி, சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்கி தனது பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ரணிலின் ஐக்கியதேசியக்கட்சி முன்வைக்குமா? தற்போது ஆட்சியிலிருக்கும் தனது புதிய கூட்டுக்கட்சிக்கு இதை அறிவுறுத்துமா? அனைத்து இராணுவ நடவடிக்கைக்கும் முழுப்பொறுப்பான தளகர்த்தர் மற்றும் முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்சவுக்கு ரணில் அறிவுறுத்துவரா? இதைச் செய்யமுடியாவிட்டால், "இனப்பிரச்சினைக்கான ஆக்கபூர்வமான கூட்டு" என்ற கோசம் நாறிப்போய்விடும்.
ஆனால் ரணில் செய்ய மாட்டார். ஐக்கிய தேசியக் கட்சி செய்யாது.
அவர்களால் அப்படிச் செய்யவோ சொல்லவோ முடியாது.
மீறினால் வெடிவிழும். அது சிங்களவன் ஒருவனின் கையிலிருக்கும் துப்பாக்கியிலிருந்து வரும்.
___________________________________________________
சரி, இந்தக் கூட்டுக்கு என்ன காரணம்?
மேற்குலக, இந்திய அழுத்தங்களால் வந்ததே இக்கூட்டு என்ற காரணத்தைச் சிலர் சொல்கிறார்கள். இங்கே இருகட்சிகள், பல கட்சிகள் என்ற கோணத்தில் அலசுவதைவிட யதார்த்தப்போக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சி என்ற அடிப்படையில் பார்க்கலாம்.
இவ்வருடத் தொடக்கத்தில் க.வே.பாலகுமாரன் சொன்னார்:
"அங்கே சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உறுமய என்று பலகட்சிகள் இல்லை. எல்லாம் ஒரே கட்சிதான். மகிந்த சிந்தனை, ரணில் சிந்தனை, சோமவன்ச சிந்தனை என்றில்லை. எல்லாம் ஒரே சிந்தனைதான். அது சிங்கள - பெளத்த - பேரினவாத சிந்தனை"
அது இன்று மெய்ப்பட்டு நிற்கிறது.
இக்கூட்டு என்ற நாடகம் சிங்கள - பெளத்த - பேரினவாதக் கட்சியின், சிந்தனையின் வெளிப்பாடே.
இதன்மூலம் என்ன செய்ய நினைக்கிறது?
இக்கூட்டு கைச்சாத்தானபின் மகிந்த சொல்கிறார், "இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டு இன்னும் இருவருடத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவோம்"
இந்த இருவருடங்களும் தமிழர்கள் என்ன செய்வது? சிங்களவன் போடும் பிச்சைக்கு வாய் பார்த்துக்கொண்டு, பட்டினிக்குப் பலிகொடுத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் நாலைந்து பேரென்று செத்துக்கொண்டு, கடத்திப் பணம் பறிக்கும் அரசவன்முறையாளரிடம் சொத்து முழுவதையும் இழந்துகொண்டு, பாரம்பரியத் தமிழ்ப்பிரதேசங்களை விட்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டு...... இருக்க வேண்டும்.
கடந்த மாவீரர் தின உரையில் பிரபாகரனால் மிகத் தெளிவான முறையில் சிங்கள தேசத்துக்கு ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. தமிழர்களுக்கான தீர்வாக சிங்கள தேசம் என்ன தீர்வைத் தர முன்வருகிறீர்கள் என்பதை முன்வைக்கும்படி அவ்வேண்டுகோள் இருந்தது. இன்றுவரை எதுவுமில்லை. சமஸ்டியையே ஏற்றுக்கொள்ள முடியாது, ஒற்றையாட்சியே தீர்வு என்ற கோசம் இதே ஆளும் தரப்பால் வைக்கப்பட்டது. ஆளும் தரப்பிலேயே ஒவ்வொருவர் ஒவ்வொரு கோணத்தில் கருத்துச் சொன்னார்கள். கூட்டுக் கழித்துப்பார்த்தால் மிஞ்சுவது, அவர்களிடம் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் ஏதுமில்லை என்பதே. இப்போது இறுதியாக இந்தியப் பஞ்சாயத்து முறை பற்றிய ஆராய்ச்சி என்றளவில் புதிதாக ஒரு புரளியைக் கிழப்பியிருக்கிறார்கள்.
இந்தியப் பஞ்சாயத்து முறைக்கும் ஈழத்தமிழனின் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?
இதோ, இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த மாவீரர் நாள். சிங்களத் தலைமைக்கு தேவைக்கு அதிகமான கால அவகாசம் வழங்கப்பட்டாயிற்று. இன்னும் எந்தத் தீர்வுமில்லை. மாறாக அவலங்களையே கடந்த ஒருவருடத்தில் தந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதாகச் சொல்லப்படும் சர்வதேசம்கூட சிங்கள இனவெறிச்செயலை ஆதரித்து ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தாம் விரும்பாத ஒன்று இலங்கையில் நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் காலம் கடத்த எடுத்த முயற்சிதான் இந்தக் கூட்டு.
இதன்மூலம் இன்னும் இரண்டு வருடங்கள் என்ற காலத்தைச் சொல்கிறார்கள். இன்னும் இரண்டு வருடங்கள் இப்படியே காலத்தைக் கழிக்க முற்படுகிறார்கள். ஆனால் இனிமேல் இவர்களுக்கான காலஅவகாசம் வழங்கப்படும் ஏதுநிலைகள் தமிழர் தரப்பில் இல்லை என்றே சொல்லலாம்.
சிங்களதேசத்தினதும் சர்வதேசத்தினதும் இந்தப் பொறியிலிருந்து ஓரளவாவது மீளவைக்க - குறைந்தபட்சம் ஒரு சாட்டாகவாவது சொல்வதற்கு தமிழர் தரப்பிடம் இருக்கும் ஓர் ஆயுதம் "சம்பூர்". தாம் விரும்பிய நேரத்தில், 'சம்பூரை விட்டு இராணுவம் பின்வாங்க வேண்டும்' என்பதை ஒரு காட்டமான - காலக்கெடுவுடன்கூடிய கோரிக்கையாக முன்வைக்கக்கூடிய நிலை தமிழர் தரப்புக்கு இருக்கிறது. சிங்களத் தரப்பால் ஒருபோதுமே -கனவிற்கூட நிறைவேற்ற முடியாத கோரிக்கை அது.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல்
Subscribe to Posts [Atom]