Thursday, April 19, 2007
மூன்றாம் கட்ட ஈழப்போர்
1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.
இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.
குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.
| விழியில்_சொரியும்... |

Labels: ஈழ அரசியல், ஒலி, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர்
Wednesday, November 29, 2006
தமிழீழ மாவீரர்நாள் - விளக்கமும் வீடியோவும்
இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது.
புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று.
இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபாகரனின் உரையையும் அவரின் பிறந்தநாளோடு தொடர்புபடுத்தி எழுதி வருகிறார்கள்.
இவர்கள் தெரியாமற் செய்கிறார்கள் என்றில்லை, மாறாக வேண்டுமென்றே திரிபுபடுத்திச் சொல்லி ஒருவகை இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பைச் செய்ய கருத்துரீதியில் இவர்களிடம் இருக்கும் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடே இவ்வகையான போக்கிரித்தனமான திரிப்புக்கள்.
இதற்கு முன்னாள் தளபதி கருணாகூட விதிவிலக்காகவில்லை.
அவரின் இவ்வருட உரையில் பிரபாகரனின் பிறந்தநாளைக்குரிய நிகழ்வாக மாவீரர்நாளைச் சித்தரித்திருக்கிறார்.
பிரபாகரின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம் திகதி. அதாவது மாவீரர்நாளுக்கு முதல்நாள்.
பிரபாகரன் பிறந்ததையும் முதற்போராளி சங்கர் வீரச்சாவடைந்ததையும் மாற்ற முடியாது. அவை அந்தந்த நாட்களேதாம்.
தமது அமைப்பிலிருந்து வீரச்சாவடைந் முதற்போராளியான சங்கரின் நினைவுநாளையே மாவீரர்நாளாக புலிகள் பிரகடனப்படுத்தி இன்றுவரை அனுட்டித்து வருகின்றனர்.
முன்பு சிலவருடங்கள் நள்ளிரவில் தீபமேற்றி நடத்தப்பட்ட நிகழ்வு பின்னர் 27 ஆம் நாள் மாலை 6.05 க்கு மாற்றப்பட்டது. அது சங்கர் வீரச்சாவடைந்த நேரம்.
_____________________________________________
புலிகளின் முதற்போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் பற்றிய சிறு விவரணமும் அவர்பற்றியும் அவரின் சாவு பற்றியும் தலைவர் பிரபாகரன் வழங்கிய நேர்காணலும் சிறு வீடியோப்பதிவாக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள வீடியோவில் இவ்வாவணத்தைப் பாருங்கள்.
இங்குப் பார்க்க முடியவில்லையென்றால் நேரடியாக அந்தப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=0C-DzUdEpVw
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஈழ அரசியல், ஒலி, ஒளி, கலந்துரையாடல், மாவீரர், வரலாறு
Monday, November 27, 2006
மாவீரர்நாள் உரை- ஒலிவடிவம்
2006 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை
நன்றி: தமிழ்நாதம்
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஒலி, செய்தி, மாவீரர், வரலாறு
Wednesday, October 04, 2006
பன்னிரு வேங்கைகள் நினைவாக....
தமிழீழக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, பின் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் நிலை வந்தபோது அவர்கள் நஞ்சருந்தி 05.10.1987 அன்று வீரச்சாவடைந்தார்கள்.
எட்டு நாட்களின் முன்தான் இந்தியப்படைகளுக்கெதிராக பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தியாகி திலீபன் உயிர் நீத்திருந்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த இப்பன்னிரு வேங்கைகளின் சாவுகள் தமிழர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.
இவ் வேங்கைகளின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவுநாளான இன்று அவர்கள் நினைவாக வெளிவந்த பாடலொன்றை இங்குத் தருகிறேன்.

______________________________________
பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Friday, September 29, 2006
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
பகுதி 7
பகுதி 8
பகுதி 9 (இறுதிப்பகுதி)
முந்தைய பதிவுகள்
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஆதரவாளர், ஒலி, ஒளி, மக்கள் எழுச்சி
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.
பகுதி 5
பகுதி 6
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: ஆதரவாளர், ஒலி, ஒளி, மக்கள் எழுச்சி
Friday, September 01, 2006
வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2
பகுதி - 3
பகுதி - 4
Labels: ஆதரவாளர், ஒலி, ஒளி, மக்கள் எழுச்சி
Sunday, August 27, 2006
வை.கோ பேச்சு - ஒளிப்பதிவு
அதே கருத்தைச் சொல்லும் வை.கோவின் பேச்சின் சிறுபகுதியை ஒளிவடிவமாக இங்கே இடுகிறேன்.
திராவிடத் தமிழர்கள் வெளியிட்ட பேச்சும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியாது.
இது நெல்லையில் 29.12.2005 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வை.கோ பேசியதன் முதல் 20 நமிட ஒளிப்பதிவு.
மிகுதியை பின்பு பதிவாக்குகிறேன்.
பகுதி ஒன்று.
பகுதி இரண்டு.
Labels: ஆதரவாளர், ஒலி, ஒளி, மக்கள் எழுச்சி
Monday, July 31, 2006
ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு
இன்று அவரின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.
தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.
போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.
கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]
சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.
01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.
"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணையின் சிறப்புத் தொகுப்பொன்று செய்ய எண்ணியிருந்தேன். நேரம் போதாமை மற்றும் முக்கிய இரண்டொரு பாடல்கள் இல்லாமை காரணமாக முடியவில்லை. இதுவரை வெளியிட்டவற்றில் சிட்டண்ணையின் பாடல்களை ஒரு தொகுப்பாக இட எண்ணுகிறேன்.
சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.
Labels: ஒலி, கவிதை, நினைவு, மாவீரர்
Monday, July 24, 2006
கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ
1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.
உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கூகிளில் முழுத் தொகுப்பும் ஒரே கோப்பாக உள்ளது.
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2
கூகிள் வீடியோ
அல்லது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்.
Labels: இராணுவ ஆய்வு, ஒலி, ஒளி, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், வரலாறு
Saturday, July 22, 2006
திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ
1983 ஆம் வருடம் இதேநாள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத் தொடரணி புலிகளினால் தாக்கப்பட்டு 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவொரு திருப்புமுனைத் தாக்குதல்.
முதன்முதலில் பெருந்தொகை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார்.
ஒரு கிழமைக்கு முன்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மீசாலைச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்திருந்தார்.
இத்தாக்குதல் பற்றி பிரபாகரன் கூறுவதைக் காணுங்கள்.
Labels: இராணுவ ஆய்வு, ஒலி, ஒளி, சமர் நினைவு, வரலாறு
Saturday, July 15, 2006
சீலன் பற்றி பிரபாகரன் - வீடியோப்பதிவு
இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.
தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.
இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.
திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?
எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?
என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.
வீடியோ இணைப்பு
பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.
தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.
சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.
வீடியோ இணைப்பு
சீலனின் இறுதி நாள் பற்றி.
சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி பிரபாகரன் விவரிக்கிறார்.
கூகிள் இணைப்பு
Labels: ஒலி, ஒளி, நினைவு, மாவீரர், வரலாறு
Sunday, April 23, 2006
வரலாற்றுக் குரற் பதிவுகள்.
குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)
***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)
***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)
***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.
**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு
**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.
**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.
*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.
இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.
சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.
இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.
Labels: ஈழ அரசியல், ஒலி, கலந்துரையாடல், நினைவு, பகிர்தல், மாவீரர், வரலாறு
Tuesday, January 03, 2006
சீலன் எனும் ஆளுமை பற்றிப் பிரபாகரன்
ஏற்கெனவே மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினத்தையொட்டி போடப்பட்ட பதிவிது. ஆனால் அந்நேரம் ஒலிப்பதிவகள் சீராக வேலைசெய்யவில்லையாதலால் பலராற் கேட்க முடியாமலிருந்தது. இப்போது மேலதிகமான இணைப்புக்களுடன் மீண்டும் அக்குரற் பதிவுகள்.
---------------------------------------------
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
தொடர்ந்தும் சீலனைப்பற்றிய மேலதிக தகவல்கள்:
சீலனின் விளையாட்டுத்தனங்கள்:
சீலனுக்கு 'இதயச்சந்திரன்' என தனிப்பட பெயர்சூட்டியதற்குரிய காரணம் பற்றியும் தன் மகனுக்கு அவரின் பெயரைச் சூட்டியமையும், முதலாவது மரபுவழிப்படையணிக்குப் பெயர் வைத்தது பற்றியும்:
சீலனின் ஆளுமையும் குணஇயல்புகளும்:
தொடக்க காலத்தில் போராளிகளின் பயிற்சிகள், இயங்கியவிதங்கள் பற்றிய ஒரு பதிவு:
இத்துடன் .Zip வடிவத்தில் முழுக் கோப்புக்களையும் வைத்துள்ளேன். தேவையானவர்கள் தரவிறக்கிக் கொள்ளவும்.
இணைப்பு ஒன்று.
இணைப்பு இரண்டு.
அல்லது இங்கே
நன்றி: விடுதலைத் தீப்பொறி-II
தமிழ்ப்பதிவுகள்
Tuesday, November 29, 2005
மாவீரர் நாள் உரைகள்.
ஒலிவடிவம்.
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒலிவம்
பகுதி ஒன்று.
பகுதி இரண்டு.
------------------------------------
அனைத்து இணைப்புக்களும் தமிழ்நாதம் இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டவை.
தமிழ்நாதம் இணையத்தளத்துக்கு நன்றிகள்.
Labels: ஈழ அரசியல், ஒலி, மாவீரர், வரலாறு
Subscribe to Posts [Atom]


