Monday, July 24, 2006

கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ

இன்றைய நாள் (ஜூலை 24) ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில மறக்கமுடியாத நாள். அவலமும் வெற்றிக்களிப்பும் கலந்தநாள்.

1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.

கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.

உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கூகிளில் முழுத் தொகுப்பும் ஒரே கோப்பாக உள்ளது.

கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1


கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2


கூகிள் வீடியோ



அல்லது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்.

Labels: , , , , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: thuyawan

நன்றி வன்னியன் உங்களின் இணைப்பிற்கு! இரண்டாவது இணைப்பில் உள்ள பாடல் வரிகள் எனக்கு ரெம்பவே பிடிக்கும். அதைப் பாடியவர் சாந்தன் தானே?

21.10 24.7.2006
 
அந்தப்பாடலைபாடியவர் தேனிசை செல்லப்பா எனநினைக்கிறேன்.
 
தூயவன், அனானி,
வருகைக்கு நன்றி.

அது செல்லப்பாவே தான்.
காசியரின் வரிகள்.
 
எழுதிக்கொள்வது: thuyawan

எனக்கு சாந்தனின் குரலும் தேனிசையின் குரலும் ஒரே மாதிரித் தான் தோன்றுபவை! அதனால் தான் இந்த குழப்பம்!

இருந்தாலும்இ ரத்வத்த காலத்தில் தேனிசை விடுதலைப்புலிகளுக்காக பாடிக்கொண்டிருந்தாரா? நான் நினைத்தேன். அவர் பிற்பட்ட காலத்தில் புலிகளிடம் இருந்து ஒதுங்கி விட்டார் என்று. ஏனென்றால் பொதுவாக அவர் பற்றிய செய்திகள் எதுவுமே வருவதில்லை. இப்போது அவர் எங்கே என்று தெரியுமா?

10.35 25.7.2006
 
வன்னி,
நான் ஏற்கனவே இவ் ஒளிப்படத்தைப்
பார்த்திருந்தாலும், மீண்டும் பார்த்தேன்.
மிக்க நன்றி
 
தூயவன், வெற்றி,
வருகைக்கு நன்றி.

//எனக்கு சாந்தனின் குரலும் தேனிசையின் குரலும் ஒரே மாதிரித் தான் தோன்றுபவை! அதனால் தான் இந்த குழப்பம்!//

அப்படியா? எனக்கு ஆச்சரியம்.

செல்லப்பா இதற்குப்பின்னும் பாடல்கள் பாடியிருக்கிறார்.
இப்போது அவர் தமிழகத்தில்தான் இருக்கிறார். அவரது கடவுச்சீட்டை ஜெயலலிதா அரசாங்கம் பறித்து வைத்திருந்தது தெரியும். தமிழகத்தில் நிகழ்வுகளில் பாட்டுக்கச்சேரி செய்கிறார். தமிழீழ எழுச்சிப்பாடல்களைப் பாடுகிறார்.

எங்கும் இறுதிப்பாடலாக "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்" பாடலைப் பாடித்தான் முடிக்கிறார். (மக்கள் அனைவரும் எழுந்துநின்றுதான் இந்த இறுதிப்பாடலைக் கேட்கிறார்கள்) இன்றும்கூட அனேகமாக செல்லப்பா இல்லாமல் ஈழவிடுதலை ஆதரவுக்கூட்டங்கள் இல்லையே?
 
எழுதிக்கொள்வது: விஜய்

நண்பரே என்னால் அந்த விடியோ பதிவை காணமுடியவில்லை. நீங்கள் தந்த குகூள் இணைப்பும் வேலை செய்யவில்லை. நான் அதை பார்க்க ஔஔவேண்டும். தயவு செய்து சரிசெய்யவும்
விஜய்
இந்தியா

12.4 26.7.2006
 
அன்பு வன்னியனுக்கு,
அனைத்து வீடியோக்களுக்கும் நன்றி.


யெம்கே.
 
விஜய், கூகிள் இணைப்பு என் கணினியிலும் வேலை செய்யவில்லைத்தான்.
யுரியூப் இணைப்புக்கு நீங்கள் மென்பொருளொன்று நிறுவவேண்டி வரலாம். பக்கத்தைத் திறக்கும்போது செய்தி ஏதாவது அந்த இடத்தில் வருகிறதா?

குமார், வருகைக்கு நன்றி.
 
எழுதிக்கொள்வது: karthik

vanakam

1.28 11.9.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]