Wednesday, November 29, 2006

தமிழீழ மாவீரர்நாள் - விளக்கமும் வீடியோவும்

தமிழீழ மாவீரர்நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந் மாவீர்களை நினைவுகூரும் நாள். இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் ஈரோஸ் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் இவர்களைவிட ஏனைய சிலரும் (குட்டிமணி, தங்கதுரை உட்பட) நினைவுகூரப்படுகிறார்கள்.
இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது.

புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று.

இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபாகரனின் உரையையும் அவரின் பிறந்தநாளோடு தொடர்புபடுத்தி எழுதி வருகிறார்கள்.
இவர்கள் தெரியாமற் செய்கிறார்கள் என்றில்லை, மாறாக வேண்டுமென்றே திரிபுபடுத்திச் சொல்லி ஒருவகை இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பைச் செய்ய கருத்துரீதியில் இவர்களிடம் இருக்கும் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடே இவ்வகையான போக்கிரித்தனமான திரிப்புக்கள்.

இதற்கு முன்னாள் தளபதி கருணாகூட விதிவிலக்காகவில்லை.
அவரின் இவ்வருட உரையில் பிரபாகரனின் பிறந்தநாளைக்குரிய நிகழ்வாக மாவீரர்நாளைச் சித்தரித்திருக்கிறார்.

பிரபாகரின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம் திகதி. அதாவது மாவீரர்நாளுக்கு முதல்நாள்.
பிரபாகரன் பிறந்ததையும் முதற்போராளி சங்கர் வீரச்சாவடைந்ததையும் மாற்ற முடியாது. அவை அந்தந்த நாட்களேதாம்.

தமது அமைப்பிலிருந்து வீரச்சாவடைந் முதற்போராளியான சங்கரின் நினைவுநாளையே மாவீரர்நாளாக புலிகள் பிரகடனப்படுத்தி இன்றுவரை அனுட்டித்து வருகின்றனர்.

முன்பு சிலவருடங்கள் நள்ளிரவில் தீபமேற்றி நடத்தப்பட்ட நிகழ்வு பின்னர் 27 ஆம் நாள் மாலை 6.05 க்கு மாற்றப்பட்டது. அது சங்கர் வீரச்சாவடைந்த நேரம்.
_____________________________________________
புலிகளின் முதற்போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் பற்றிய சிறு விவரணமும் அவர்பற்றியும் அவரின் சாவு பற்றியும் தலைவர் பிரபாகரன் வழங்கிய நேர்காணலும் சிறு வீடியோப்பதிவாக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள வீடியோவில் இவ்வாவணத்தைப் பாருங்கள்.




இங்குப் பார்க்க முடியவில்லையென்றால் நேரடியாக அந்தப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=0C-DzUdEpVw
_____________________________________________

Labels: , , , , ,


Monday, November 27, 2006

மாவீரர்நாள் உரை- வீடியோ

தமிழீழ மாவீரர்நாளில் தேசியத்தலைவரால் ஆற்றப்பட்ட உரையை வீடியோ வடிவில் காண கீழ்க்கண்ட இணைப்பை அழுத்தவும்.

மாவீரர்நாள் உரை - வீடியோ

நன்றி: http://www.tamilflame.com

_____________________________________________

Labels: , , ,


Friday, September 29, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


பகுதி 7


பகுதி 8


பகுதி 9 (இறுதிப்பகுதி)



முந்தைய பதிவுகள்

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1


_____________________________________________

Labels: , , ,


வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

பகுதி 5



பகுதி 6



வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

_____________________________________________

Labels: , , ,


Friday, September 01, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

நெல்லையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசியவற்றிலிருந்து முதலாம் பாகம் (பதினைந்து நிமிடங்கள்) ஏற்கனவே பதிவாக்கட்டிருக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களைக் கொண்ட இரண்டாம் பாகம் இப்பதிவில் வருகிறது.


பகுதி - 3



பகுதி - 4

Labels: , , ,


Sunday, August 27, 2006

வை.கோ பேச்சு - ஒளிப்பதிவு

திராவிடத் தமிழர்கள் வலைப்பதிவில் வை.கோ அவர்களின் ஈழஆதரவுப் பேச்சின் எழுத்துவடிவம் பதிவாக்கப்பட்டிருந்தது.
அதே கருத்தைச் சொல்லும் வை.கோவின் பேச்சின் சிறுபகுதியை ஒளிவடிவமாக இங்கே இடுகிறேன்.
திராவிடத் தமிழர்கள் வெளியிட்ட பேச்சும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியாது.

இது நெல்லையில் 29.12.2005 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வை.கோ பேசியதன் முதல் 20 நமிட ஒளிப்பதிவு.
மிகுதியை பின்பு பதிவாக்குகிறேன்.

பகுதி ஒன்று.


பகுதி இரண்டு.

Labels: , , ,


Monday, July 24, 2006

கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ

இன்றைய நாள் (ஜூலை 24) ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில மறக்கமுடியாத நாள். அவலமும் வெற்றிக்களிப்பும் கலந்தநாள்.

1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.

கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.

உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கூகிளில் முழுத் தொகுப்பும் ஒரே கோப்பாக உள்ளது.

கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1


கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2


கூகிள் வீடியோ



அல்லது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்.

Labels: , , , , , , ,


Saturday, July 22, 2006

திருநெல்வேலி தாக்குதல் பற்றி பிரபாகரன் -வீடியோ

இன்று (ஜூலை 23) வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதல் நினைவுநாள்.
1983 ஆம் வருடம் இதேநாள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத் தொடரணி புலிகளினால் தாக்கப்பட்டு 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவொரு திருப்புமுனைத் தாக்குதல்.
முதன்முதலில் பெருந்தொகை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவடைந்தார்.
ஒரு கிழமைக்கு முன்தான் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியான லெப்.சீலன் மீசாலைச் சுற்றிவளைப்பில் வீரச்சாவடைந்திருந்தார்.

இத்தாக்குதல் பற்றி பிரபாகரன் கூறுவதைக் காணுங்கள்.

Labels: , , , ,


Saturday, July 15, 2006

சீலன் பற்றி பிரபாகரன் - வீடியோப்பதிவு

கடந்த பதிவில் இணைப்புக்கள் சரியாக இல்லாததால் இது திருத்திய மீள் பதிவு.

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் முதலாவது தாக்குல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவருமான லெப்.சீலன் அவர்களின் 23 ஆவது நினைவு நாள். அவர் பற்றிய குறிப்புக்கள், ஆக்கங்கள் பரவலாக வெளிவந்துள்ளன.

தலைவர் பிரபாகரன் நேரடியாக அவரைப் பற்றிச் சொல்லியவற்றிலிருந்து மூன்று சிறுதுண்டுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவை விடுதலைத் தீப்பொறித் தொகுப்பிலிருந்து பெறப்பட்டவை.
இப்பதிவில் வீடியோ வேலை செய்யவில்லையெனில் கூகிள் தளத்துக்கே சென்று பார்வையிடக்கூடியவாறு கீழே இணைப்புக்கள் தந்துள்ளேன்.

திருமலையில் பிறந்த சாள்ஸ் அன்ரனி எவ்வாறு இயக்கத்தில் இணைந்தார்?
எவ்வாறு பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய வீரனானார்?
என்பவையுட்பட சில தகவல்களை தலைவர் பிரபாகரன் விவரிக்கிறார்.



வீடியோ இணைப்பு

பிரபாகரன் தன் ஞாபகத்தளத்திலிருந்து முக்கியமான குறிப்புக்களைச் சொல்கிறார்.
தனக்கு அடுத்த நிலையில் அவரை எதிர்பார்த்தாகக் குறி்ப்பிடுகிறார்.
சீலனின் வாசிப்பு வேட்கை, மார்க்சியச் சிந்தனையுடனான வளர்ச்சி பற்றியும் சொல்கிறார்.



வீடியோ இணைப்பு


சீலனின் இறுதி நாள் பற்றி.
சீலன் வீரச்சாவடைந்த அச்சம்பவம் பற்றி பிரபாகரன் விவரிக்கிறார்.





கூகிள் இணைப்பு

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]