Wednesday, October 04, 2006

பன்னிரு வேங்கைகள் நினைவாக....

குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி மாண்டநாள் இன்று.

தமிழீழக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, பின் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் நிலை வந்தபோது அவர்கள் நஞ்சருந்தி 05.10.1987 அன்று வீரச்சாவடைந்தார்கள்.
எட்டு நாட்களின் முன்தான் இந்தியப்படைகளுக்கெதிராக பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து தியாகி திலீபன் உயிர் நீத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நடந்த இப்பன்னிரு வேங்கைகளின் சாவுகள் தமிழர் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின.

இவ் வேங்கைகளின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவுநாளான இன்று அவர்கள் நினைவாக வெளிவந்த பாடலொன்றை இங்குத் தருகிறேன்.


______________________________________
பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.






_____________________________________________

Labels: , ,


Comments:
நினைவுப் பதிவுக்கு நன்றி.

-வாசகன்.
 
வன்னியன்!

நெஞ்சம் மறக்குமா ?
 
வன்னி,
பதிவுக்கு நன்றி.
எம்மினத்தின் விடிவுக்காகத் தமதுயிரைத் தியாகம் செய்த இம் மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது வல்வெட்டித்துறையில் இவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருந்தேன்.
 
பதிவுக்கு நன்றி..
 
வாசகன்,
மலைநாடான்,
வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான்,
'நெஞ்சம் மறக்குமா?' பாட்டை எனது ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் தருகிறேன்.
 
செந்தழல் ரவி,
வருகைக்கும் நினைவுகூர்வில் பங்கெடுத்ததற்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]