Sunday, April 23, 2006
வரலாற்றுக் குரற் பதிவுகள்.
குரற் பதிவுகள் போடாமல் எனது நட்சத்திரக் கிழமை முழுமை பெறாது. போதாததுக்கு அன்பர்கள் சிலரும் குரற்பதிவு போடச் சொல்லி ஒரே அரியண்டம். அதால பதிவு போடுறதெண்டு முடிவெடுத்திட்டன். ஒண்டில்ல, ரெண்டில்ல ஏழு ஒலிக்கோப்புக்கள். எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள்.
குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)
***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)
***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)
***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.
**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு
**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.
**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.
*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.
இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.
சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.
இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.
குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)
***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)
***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)
***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.
**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு
**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.
**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.
*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.
இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.
சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.
இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.
Labels: ஈழ அரசியல், ஒலி, கலந்துரையாடல், நினைவு, பகிர்தல், மாவீரர், வரலாறு
Tuesday, April 18, 2006
குறிதவறிய சூடும் திருவள்ளுவரும்.
***நட்சத்திரப் பதிவு -03***
வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.
1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )
தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)
பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.
'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.
தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?
பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.
தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.
"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,
"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.
"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.
அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.
பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"
"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.
சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது."
வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.
1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )
தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)
பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.
'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.
தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?
பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.
தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.
"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,
"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.
"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.
அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.
பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"
Labels: அலட்டல், அனுபவம், நட்சத்திரம், பகிர்தல், வன்னி
Friday, July 15, 2005
சீலன் எனும் ஆளுமை பற்றி பிரபாகரன்.
வணக்கம்.
இன்று மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
இன்று மாவீரன் லெப்.சீலனின் இருபத்தியிரண்டாவது நினைவுதினம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்த சீலனைப் பற்றிய பிரபாகரனின் நினைவுகூரல்கள் இவை.
ஏற்கெனவே இடப்பட்ட பதிவாயினும் இன்று அவ்வீரனின் நினைவுதினமாகையால் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது, மேலும் சில இணைப்புக்களுடன்.
நான் ஏற்கெனவே சாள்ஸ் அன்ரனி எனப்படும் சீலன் பற்றி எழுதியுள்ளேன். விடுதலைப்புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதியாயிருந்து வீரச்சாவடைந்தவர். இயக்கத்தின் தொடக்க காலத்தில் மிக முக்கியமாயிருந்த இவர்பற்றி தலைவர் பிரபாகரன் சொல்வதைக் கேட்க விரும்புகிறீர்களா? இப்போது கைவசம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் சீலன் பற்றிச் சொல்லும் காட்சிப்பதிவு கிடைத்தது. நீண்ட விவரணத்திலிருந்து பிரபாகரனின் குரல் பதிவுகளை மட்டும் ஒலிக்கோப்பாக்கி இங்கே இடுகிறேன்.
ஒவ்வொரு கோப்பிலும் தலா 2 இணைத்துள்ளேன். ஏதாவதொன்று வேலை செய்யலாம்.
ஒலிப்பதிவுகள் கேட்க முடியாமலிருக்கும் பட்சத்தில் இரண்டு நாள் சென்ற பின் முயற்சிக்குமாறு கேட்கிறேன்.
திருமலையைச் சேர்ந்த சாள்ஸ் அன்ரனி எனும் இளைஞன் எவ்வாறு புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார், எவ்வாறு இயக்கத்தில் கவனிக்கப்படத்தக்கவராக விளங்கினார், அவரது மனப்பாங்கு என்பன பற்றி பிரபாகரன் தன் குரலிற் சொல்கிறார்.
Thursday, July 07, 2005
கரும்புலிகள் பற்றி பொட்டு அம்மான்...
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் கரும்புலிகளுடனான தனது அனுபவங்கள் இரண்டைத் தனது குரலிலேயே சொல்கிறார். இந்த இணைப்பைப் பயன்படுத்திக் கேட்கவும். இதிற் சொல்லப்படும் நபர்கள் வெளித்தெரியாமல் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
இதில் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இடமுள்ளது. உயிர்கள் பற்றிய தன் கருத்தை மாமிசம் உண்ணாத அக்கரும்புலி வீரன் சொல்வதும், பின்னொரு நாளில் எதிரிகள் பலரை அளிப்பதும் தான் அது. ஆனால் யதார்த்தம் மிக எளிமையானது. எதிரிகளைக் கொன்றுதான் தன் சமூகத்தைக் காக்க வேண்டுமெனில், உணவுக்காகக் கொல்லப்படும் மீனையும் மிருகத்தையும்விட எதிரிகளின் உயிர்களின் மதிப்புக் குறைவுதான் போலும்.
ஒலிப்பதிவின் தொடக்கத்தில் அரை நிமிட விளம்பரம் வரும். பொறுத்தருள்க.
நன்றி-
பதிவுகள் தளம்.
இதில் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் இடமுள்ளது. உயிர்கள் பற்றிய தன் கருத்தை மாமிசம் உண்ணாத அக்கரும்புலி வீரன் சொல்வதும், பின்னொரு நாளில் எதிரிகள் பலரை அளிப்பதும் தான் அது. ஆனால் யதார்த்தம் மிக எளிமையானது. எதிரிகளைக் கொன்றுதான் தன் சமூகத்தைக் காக்க வேண்டுமெனில், உணவுக்காகக் கொல்லப்படும் மீனையும் மிருகத்தையும்விட எதிரிகளின் உயிர்களின் மதிப்புக் குறைவுதான் போலும்.
ஒலிப்பதிவின் தொடக்கத்தில் அரை நிமிட விளம்பரம் வரும். பொறுத்தருள்க.
நன்றி-
பதிவுகள் தளம்.
Labels: பகிர்தல், மாவீரர், வரலாறு
Tuesday, June 28, 2005
கௌசல்யன் மருத்துவமனையின் பணி
ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பும்லெப்.கேணல் கௌசல்யன் மருத்துவமனையின் பணி.
(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)
போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப் . கேணல் கௌ சல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.
எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?
ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.
இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?
பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.
நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?
ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.

[வான்மதி]
இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.
இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?
எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.
நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
நன்றி:- ஈழநாதம்.
(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)
போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப் . கேணல் கௌ சல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.
எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?
ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.
இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?
பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.
நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?
ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.

[வான்மதி]
இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.
இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?
எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.
நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
நன்றி:- ஈழநாதம்.
Labels: ஈழ அரசியல், பகிர்தல், மக்கள் எழுச்சி, மக்கள் துயரம், வன்னி
Subscribe to Posts [Atom]