Thursday, September 27, 2007
கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்
இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.
பின்னணி
தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது.
1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.
இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.
முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.
இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.
1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பாதுகாப்புப் பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். (ஆனால் யாரோ கண்டி தலதா மாளிகைக்கு வெடிகுண்டுப் பாரவூர்தியை அனுப்பிவிட்டார்கள்) அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.
கிளிநொச்சி மீட்பு
1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் பதினோராவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.
3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து 15 கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).
ஆனையிறவையும் கிளிநொச்சிப் படைத்தளத்தையும் ஊடறுத்து பரந்தனில் நிலைகொண்டிருந்த புலியணியைத் தாண்டி கிளிநொச்சியில் எஞ்சியிருந்த சிங்களப்படைகள் ஓட்டம் பிடித்தன. ஆடுமாடுகள் பட்டிவிட்டு ஓடுவதுபோல் நூற்றுக்கணக்கில் கும்பலாக ஓடித்தப்பிய படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சில வீரவரலாறுகள் புலிகளால் எழுதப்பட்டன.
புலிகளின் மகளிர் படையணியொன்றின் தளபதியாக களத்தில் நின்ற லெப்.கேணல் செல்வி, எறிகணைகளை எதிரிகளுக்கிடையில் வீழ்த்த ஆள்கூறுகளையும் திருத்தங்களையும் பீரங்கிப்டையணிக்கு அறிவித்துக்கொண்டிருந்தார். அதில் கொல்லப்பட்டவர்கள் போக மிகுதி இராணுவத்தினர் செல்வியையும் தாண்டி ஆனையிறவு நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்.
துப்பாக்கியால் சண்டைபிடிக்க முடியாதளவுக்கு கொத்துக் கொத்தாக இராணுவத்தினர்.
செல்வியின் பீரங்கிப்படைக்கான அறிவுறுத்தல் இப்படியாக இருந்தது.
"என்னைச்சுத்தி ஆமிதான் நிக்கிறான். என்னால இனி ஒண்டும் செய்ய ஏலாது. என்னைப்பற்றிக் கவலைப்படாமல் நான் நிக்கிற இடத்துக்கு செறிவா குத்துங்கோ...."
அச்சமரில் லெப்.கேணல் செல்வி வீரச்சாவடைந்திருந்தார்.
இதே போன்றதொரு சம்பவம் மீண்டும் 11.08.2006 அன்று யாழ்ப்பாணம் மீது புலிகளால் நடத்தப்பட்ட சமரிலும் நடந்தது.
ஓயாத அலைகள் -2 சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்திருந்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்காககக் களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவோர் மீள்பதிவு
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர், வன்னி
Tuesday, August 14, 2007
செஞ்சோலைப் படுகொலை - ஓராண்டு நினைவு
கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Sencholai air-strike killed 55, details released
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
S Jeyarubi (Age 20)
___________________________________
நன்றி: தமிழ்நெற்
Labels: ஈழ அரசியல், துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு, வன்னி
Thursday, July 19, 2007
ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...
இன்று (18 July) விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின்பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.
ஏறத்தாழ இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.
இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் புலிகளால் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.
கடலில் 'ரணவிறு' என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.
அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.
எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.
தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாய்ப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.
அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)
இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.
இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.
முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது.
இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.
ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.
முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.
--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.
கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்றைய நாளில் கிழக்கின் மீதான தனது ஆக்கிரமிப்பை பெரு வெற்றியாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
உண்மையில் தமிழர் தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்.
எதிரி முட்டாள்தனமாகச் செயற்படுகிறான்; அகலக்கால் வைக்கிறான்; அடிவாங்கப் போறான் போன்ற அலம்பல்களைத் தாண்டி, இது உண்மையில் மிகப்பெரிய - ஆனால் தவிர்க்கப்பட முடியாத பின்னடைவுதான்.
யாழ்ப்பாணத்தை நாம் இழந்தபோதும் இதேபோல் பெரியதொரு வெற்றிவிழா சிங்களத் தரப்பால் கொண்டாடப்பட்டது. இன்றும் ஈழத்தமிழரைச் சினமூட்டி இக்கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இதை மீறி உயித்தெழ வேண்டியது எமது கடமை.
எப்படியும் இவர்களைப் பூண்டோடு அழித்துவிடுவதென்று சிங்களத் தரப்புக்கு இணையாக சர்வதேசமும் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.
களத்தின் வெற்றி தோல்விகள்தான் சர்வதேசத்திலும் எதிரொலிக்குமென்பது கடந்த கால வரலாறு.
இவர்கள் மீண்டும் இறங்கி வருவார்கள். கைகுலுக்குவார்கள்.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு, வன்னி
Sunday, June 10, 2007
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது.
13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.
முன்னணிப்பகுதியான ஓமந்தையை அப்படியே விட்டுவிட்டு, பின்தளமான தாண்டிக்குளத்தின் மீது புலிகள் புலிகள் தாக்குதலை நடத்தினர். ஓரிரவு மட்டுமே நடத்தப்பட்ட இவ்வதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதோடு, படையினரில் வினியோகத்துக்கான ஆயுதக்களஞ்சியமொன்று வெடித்துச் சிதறியிருந்தது. புலிகளால் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அரசவான்படையின் MI-25 தாக்குதல் உலங்குவானூர்தியொன்று புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
இத்தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அதன் தொடக்கத்தின்போதே ஆட்டம்காணத் தொடங்கியது. மூர்க்கமான முன்னேற்ற முயற்சிகள் சிறிதுகாலம் பிற்போடப்பட்டன. அதன்பின் சீரான இடைவெளிகளில் அவ்வப்போது ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது புலிகளின் வலிந்த அதிரடித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதலில் மூன்று கரும்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். புலிகளால் உரிமைகோரப்பட்டதன் அடிப்படையில் முதலாவது பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி இத்தாக்குதலில்தான் வீரச்சாவடைந்தார். அவருடனிணைந்து மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலை 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் கேட்கலாம்.
திருவுடலில் வெடிசுமந்து
இத்தாக்குதலில் அம்மூன்று கரும்புலிகளோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.
கரும்புலிகளின் புகைப்படங்கள்



படங்கள்: அருசு்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மாவீரர், வரலாறு, வன்னி
சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்
10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.
அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.
இன்னொரு விதத்திலும் இந்நாள் முக்கியமானது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990 ஆம் ஆண்டு இதேநாளி்ல் தொடங்கியது.
Labels: துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு, வன்னி
Wednesday, May 16, 2007
வென்ற சமரின் பத்தாம் ஆண்டு நினைவு.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.

போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. அதேநேரம் நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் நோக்கிய நகர்வு கேணல் ஜெயம் அவர்களின் தலைமையில் எதிர்கொள்ளப்பட்டது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.

கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.
பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.
சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.
இந்நிலையில் இராணுவத்தளபதி மிக மோசமான செயலொன்றைச் செய்தார். மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிட்ட புலிகளுடன் பேரம் பேசினார். புலிகள் தங்கள் முன்னணி நிலைகளிலிருந்து 5 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றால் தாம் மக்களுக்கான பாதையைத் திறப்பதாகப் பேரம் பேசினார். சண்டையிட்டுப் பாதைபிடிக்க முடியாத இராணுவம் கேவலாமான நிலைக்கு இறங்கியது. இதுநடந்தது 1998 செப்ரெம்பர் மாதம். ஆனால் புலிகள் தெளிவாக மறுத்ததுடன், வேறொரு திட்டம் தீட்டினர்.
மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்று பெயரிட்டு இரவோடு இரவாக இரகசியமாய் நகர்ந்து சண்டையேதுமின்றி ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது சிறிலங்கா இராணுவம்.
றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.
முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.
இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.
மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.
நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.
2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.
இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.
இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.
இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.
வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.
ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.
ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.
************************
ஜெயசிக்குறு நடவடிக்கை மீதான முதலாவது வலிந்த தாக்குதல் 10.06.1997 அன்று தாண்டிக்குளம் படைமுகாம் மீது நடத்தப்படட தாக்குதல். அத்தாக்குதல் வெற்றி நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
************************
மேற்கண்ட பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. சில மாற்றங்களுடன் மீள்பதிவாக இடப்படுகிறது.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, வரலாறு, வன்னி
Wednesday, February 14, 2007
ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?
இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன.
இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம்.
ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்தபிறகு ஏதோ நடக்கப்போகிறது என்றும் ஒருகதை.
அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல்கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்தவேண்டியதுதான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்கள் இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததைப் பாராட்டி "சர்வதேசம்" விருது வழங்கும்; தமிழீழத்தை அங்கீகரிக்கும்; எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற கனவோடு ஏராளம் பேர் உலாவுகிறார்கள்.
ஒன்றில் நடப்பவற்றைக் கொண்டு ஊகிக்க வேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து பாடம்படிக்க முற்பட வேண்டும்.
இவை எதுவுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளையும் புரட்டுக்களையும், நம்பிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருப்பது சரியில்லை.
ஐந்தாண்டுகள் வரை பொறுமை காக்கவேண்டுமென்ற கடப்பாடோ விருப்பமோ புலிகளுக்கில்லை. அப்படி பொறுமை காப்பதில் எந்த அனுகூலமுமில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். மட்டமாக ஒரு காலத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஒரே வசதி, எதிர்காலத்தில் "நாங்கள் ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். (இவ்வருட மாவீரர் தின உரையில் முக்கிய இடம்பிடிக்கப்போகும் வசனமிது) அந்தவசனம் சொல்லத்தான் காலம் கடத்தினார்கள் என்பதற்கு, அப்படிச் சொல்வதால் என்ன கிடைக்குமென்று யோசிக்க வேண்டும்.
இவ்வளவுகாலம் நீடித்தது, காலத்தின் கட்டாயமேயன்றி ஐந்தாண்டு கணக்கிற்காக அன்று.
2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தைத் தீவிரப்படுத்த எண்ணியிருந்ததாகவும் 2004 மார்கழி கடற்கோள் அனர்த்தத்தால் அது சாத்தியப்படவில்லையென்றும் 2005 மாவீரர்நாள் உரையிலேயே சொல்லப்பட்டாயிற்று.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" மூன்றாண்டுக் கணக்குச் சொல்லித்திரிந்திருப்பார்கள்.
2006 இலேயே போர் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. புலிகள் நினைத்தபடி எதிரணி அரசியலில் எல்லாம் நடந்துகொண்டிருக்க, களத்தில் ஏற்பட்ட ஒரு பிசகால் நிலைமை தமிழர் தரப்புக்குப் பாதகமாக மாறியது. காலம் இழுபட்டது. அதற்குப்பின்னும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
எல்லாம் சரிவந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" நான்காண்டு கணக்குச் சொல்லியிருப்பார்கள்.
'சர்வதேசம்' எங்கள் பக்கம் திரும்பும், எங்களை அங்கீகரிக்கும் என்று இப்போது நம்பிக்கை கொள்வது வீண்வேலை. அதுவும் களத்தில் பின்னடைவுளைச் சந்தித்துள்ளதாக தோற்றப்பாடுள்ள இன்றைய நிலையில் அறவே சாத்தியமில்லை.
எங்களை அங்கீகரிக்கவும், ஆதரவளிக்கவும் எந்தக்கடப்பாடும் அவர்களுக்கில்லை. கடப்பாடுள்ள விடயத்திலேயே அவர்கள் சரியாக நடக்கவில்லை.
இன்று இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் நோர்வேக்கு உள்ள கடப்பாடு என்ன? அவர்கள் அதன்படி நடக்கிறார்களா? என்று பார்த்து, அதன்வழி 'சர்வதேச'த்தையும் பொருத்திப் பார்க்கலாம்.
பலவற்றுக்குப் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுள்ள நோர்வே சத்தம்போடாமல் தானுண்டு, தன் பாடுண்டு என்று இருக்கிறது. யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் கதையைக் கேட்கவே வேண்டாம்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசதரப்பால் தொடர்ந்து நடத்தப்பட்ட மீறல்கள் குறி்த்து அவர்களுக்கு எக்கவலையுமில்லை. விலகுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து தன் படைகளைவிலக்கி மக்களை இயல்புக்குத் திருப்புவதைச் செய்யாத அரசுமேல் அவர்கள் எக்குற்றச்சாட்டையும் வைக்கமாட்டார்கள். மக்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பார்கள். (இவை ரணில் காலத்திலேயே நடந்துவிட்டன). அரசு மக்கள்மேல் எறிகணை மழை பொழிந்து கொத்துக் கொத்தாகப் பலிகொண்டபோது, நோர்வே (சர்வதேசமும்) சொன்ன தீர்வு, மக்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிப்போகச் சொன்னதுதான். கொல்லப்பட்டடவர்கள் மக்கள் தான் என்பதையும் அவர்களது எண்ணிக்கையையும் சொல்வதைத்தாண்டி இந்தப் படுகொலைகள் தொடர்பில் நோர்வே (சர்வதேசமும்) செய்தது வேறொன்றுமில்லை.
ஒவ்வொருமுறை படுகொலை நடக்கும்போதும் சம்பந்தமேயில்லாமல் புலிகளையும் அதற்குள் இழுத்து ஓர் அறிக்கை விடுவதன்மூலம் பயங்கரவாத அரசுக்கு மேலும்மேலும் ஊக்கமளித்ததுதான் இந்த நோர்வே உட்பட்ட சர்வதேசம் செய்தது.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகப் பார்த்தால், அதிலும் இவர்கள் செய்தது படுகயமைத்தனம்தான்.
மூதூர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் சில மணித்துளிகளில் நோர்வே அறிக்கை விடுகிறது, "உடனடியாக பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும்" என்று. அதற்குமுன்பே அரசபடைகள் மாவிலாறு மீது படையெடுத்திருந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதன்பின் அரசபடைகள் சம்பூர் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று சம்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது நோர்வேயிடமிருந்து அறிக்கை வரவில்லை. படையினர் பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று, சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்த அறிவித்தலும் வரவில்லை.
வாகரையும் அப்படியே; கஞ்சிக்குடிச்சாறு்ம அப்படியே.
சமாதான முயற்சிகள் நடப்பதாக, பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் காட்டிக்கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த கரிசனையுமில்லை.
அப்பட்டமான நில ஆக்கிரமிப்புகள் நடந்து, பல்லாயிரம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உணவுகள்கூட மறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபடி திறந்திருக்கவேண்டிய A-9 பாதை மூடபட்டிருந்த நேரத்திலும் - எதுவுமே நடக்காதது போல் அடுத்த சுற்றுப்பேச்சுக்கு ஒழுங்கு பண்ணுவதில் மட்டும் குறியாயிருந்த - அப்படி இருதரப்பையும் மேசையில் கொண்டுவந்து இருத்திவிட்டால் எல்லாம் முடிந்தது என்று சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்ட நோர்வே (உட்பட்ட சர்வதேசம்) பற்றி நாமின்னும் அறியவில்லையா?
தான் பதில் சொல்லவேண்டிய கடப்பாடுள்ள விடங்களுக்கே எந்தவித சலனமுற்று, சாந்தமாக இருக்கிறது நோர்வே.
இந்நிலையில் எந்தச் சம்பந்தமுமில்லாத, எந்தக் கடப்பாடுமில்லாத 'சர்வதேசம்' என்று நாம் சொல்லும் சக்தி என்ன கிழிக்கப்போகிறது?
இன்று தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கெதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத சர்வதேசம் எமது உரிமைப்போராட்டத்தை "இப்போது" அங்கீகரிக்குமென்பது - அதுவும் ஐந்துவருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததென்ற ஒரே காரணத்துக்காக அங்கீகரிக்குமென்பது சுத்த மடத்தனமல்லவா?
ஐந்து வருடங்கள் ஒருதரப்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் அவர்களின் நிலம் அவர்களுக்கே என்று பட்டா எழுதும் சட்டமேதும் சர்வதேசம் என்ற சக்தி இயற்றி வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோட்பாட்டுக்குட்பட்டதைக் கூட அவர்கள் செய்யவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் பாடமாகப் படிக்க வேண்டாமா?
சுயநிர்ணயம் தொடர்பில் தனியாகப் பிரிந்து செல்லும் அதிகாரம், இடைக்கால நிர்வாகம், பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு என்று 'சர்வதேசம்' ஏற்படுத்திவைத்த - பல இடங்களில் செயற்படுத்திய நடைமுறையைக் கூட ஈழத்தவர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? ஏன்?
இவர்களுக்குப்பிடித்தால் நாட்டைப் பிரிப்பார்கள்; இல்லையென்றால் ஒட்டுவார்கள்.
சர்வதேச மனிதாபிமானத்துக்கு பல எடுத்துக்காட்டு்க்கள் இருக்கின்றன.
மிக அண்மையில் நடந்த லெபனான் பிரச்சினையிலிருந்து கூடவா நாங்கள் பாடம் படிக்கவில்லை? ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு வருவதைவிட பலநூறு மடங்கு உத்வேகத்துடன் லெபனானில் நடப்பவை உலகுக்கு வெளிவந்தன. அந்தப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. அப்படியிருந்தும் அம்மக்களை யார் காப்பாற்றினார்?
முடிவாக - ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம் என்ற காரணத்துக்காக சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும்; ஆதரவு தரும்; சர்வதேசத்தில் எமக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்பது சுத்த முட்டாள்தனமான பிதற்றல்.
ஆதரவு, அங்கீகாரம் போன்ற பம்மாத்துத் தோற்றமொன்று வருவதானாற்கூட அதைத்தீர்மானிக்கும் காரணி வேறுதான்; ஐந்தாண்டு நிறைவன்று.
______________________________
இங்கே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளையோ நிகழ்வுகளையோ கூட்டத் தொடர்களையோ நான் தவறென்று சொன்னதாக யாரும் கருதத்தேவையில்லை. அவை கட்டாயம் தேவைதான். அரசதலைவர்களை விடவும் வேற்றின மக்களிடத்தில் எமது நியாயங்களைச் சொல்வது முக்கியம். தொடர்ச்சியான கவன ஈர்ப்பைச் செய்துகொண்டிருப்பது முக்கியம். புலத்திலிருக்கும் எல்லோரும் ஒரேயணியில் திரள்வதற்கும், இளையோரிடத்தில் ஒன்றிப்பும் பங்கேற்றலும் அதிகரித்தலுக்கும்கூட இவை முக்கியம்.
ஒரு நோக்கத்துடனான செய்பாடு வேறு; அது நிறைவேறும் முன்பே அதீத நம்பிக்கை கொண்டு பகற்கனவு காண்பது வேறு.
இந்தியா எமது பக்கமென்று புழுகித்திரியும் வேளையிலேயே அது நசுக்கிடாமல் தனது வழமையான பணியைச் செய்துகொண்டிருக்கிறது.
அதற்காக, 'இந்தியா இனிச்சரிவராது' என்று பேசாமல் இருந்துவிட முடியாது. அரசியல் சந்திப்புக்கள், முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கட்டும். ஆனால் அதன் தற்போதைய நிலைப்பாட்டை, செயற்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டு, கனவுகள் காணாமல் இருப்பதும் முக்கியம்.
_____________________________
ஐந்தாண்டு நிறைவின்பின் பெரியதொரு தாக்குதல் புலிகளால் நடத்தப்படுமென்ற கதை பரவலாக உள்ளது.
அது சரிதான். ஆனால் இந்த ஐந்தாண்டு நிறைவுக்காகத்தான் தாக்குதலை ஒத்திப்போட்டுள்ளார்கள்; நிறைவுநாள் வந்ததும் பாயப்போகிறார்கள் என்ற தோற்றத்தை பலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
இப்போதுள்ள தோற்றப்படி ஐந்தாண்டு நிறைவுக்கு அடுத்தநாள் புலிகள் கட்டாயம் தாக்குதல் தொடங்கப்போகிறார்கள் என்ற நினைப்புடன்தான் பலர் திரிகிறார்கள். அன்றிரவு நித்திரை கொள்ளாமல் செய்திக்காகக் காத்திருக்கப் போகிறவர்கள் எத்தனைபேரோ தெரியாது. அது நடக்காத பட்சத்தில் மக்கள் சலிப்பூட்டப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் இக்கதையைக் கட்டிவிட்டவர்கள்தாம் காரணமாக இருப்பார்கள்.
இனி, இராணுவ ரீதியில் பலமானதொரு தாக்குதல்தான் அடுத்த நடவடிக்கை என்ற முடிவுக்கு தமிழர்தரப்பு வந்தாயிற்று. அதை நிகழ்த்த ஐந்தாண்டு நிறைவென்பது ஒரு காரணமேயன்று. ஆட்பலத்திரட்டல் உட்பட பலவேலைத்திட்டங்களின் பின்தான் அது நிகழ்த்தப்படும். ஏற்கனவே நடந்த சில தவறுகள், இழப்புக்களைச் சீர்செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் இடங்களேதும் கைப்பற்றாமல், மாறாக இழக்கப்பட்டு, எண்ணூற்றுச் சொச்சம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தவறுகள் களையப்பட்டு, எல்லாம் சீர் செய்யப்பட்டு, மிகுந்த ஆயத்தத்தோடும் எச்சரிக்கையோடும்தான் தாக்குதல் முயற்சியில் இறங்குவார்கள்.
சும்மா வெளியிலிருந்து கொண்டு 'ஏன் இன்னும் அடிக்கேல?', 'அஞ்சு வருசம் முடிஞ்சு தானே?' என்ற புலம்பல்களுக்காக அங்கே தாக்குதல் செய்ய முடியாது.
களத்திலிருக்கும் மக்களும் களத்தை நடத்துபவர்களும் (மட்டும்)தான் அதைப்பற்றித் தீர்மானிக்க முடியும்.
அவர்கள் எப்போது செய்வார்களோ அப்போது செய்துகொள்ளட்டும்.
புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி.
____________________________
நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.
Labels: அரசியற் கட்டுரை, ஈழ அரசியல், வன்னி, விமர்சனம்
Thursday, February 01, 2007
கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998
1997 மே இல் தொடங்கி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த காலம்.
"1998 பெப்ரவரி நாலாம் திகதி ஜெயசிக்குறு இராணுவம் கிளிநொச்சியை அடையும்; தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை அமைக்கப்படும்" என்று அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை உறுதியளித்து கடும்போரை வன்னியில் நடத்திய நேரம்.
அந்த நேரத்தில் ஜெயசிக்குறு படையினர் தொடர்பை ஏற்படுத்தவேண்டிய இறுதி இலக்கான கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிவெடுத்தனர் புலிகள். சிறிலங்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர்தான் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடத்தப்படவிருந்த கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி சிங்களத் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
01.02.1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது.தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள்.
சமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன.
இவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
கரும்புலி லெப்.கேணல் சுபேசன்
கரும்புலி மேஜர் குமுதன்
கரும்புலி மேஜர் ஜெயராணி
கரும்புலி மேஜர் மங்கை
கரும்புலி மேஜர் ஆஷா
கரும்புலி கப்டன் குமரேஸ்
கரும்புலி கப்டன் நளாயினி
கரும்புலி கப்டன் செங்கதிர்
கரும்புலி கப்டன் உமையாள்
கரும்புலி கப்டன் நளா
கரும்புலி கப்டன் இந்து











கிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை.
அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.


எதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்ரெம்பரில் 'ஓயாத அலைகள் -2" நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாக மீட்டெடுத்தனர் புலிகள்.
படங்கள்: அருச்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, மாவீரர், வன்னி
Monday, December 04, 2006
ஜெயசிக்குறு நிறைவுநாள்
19.05.1997 அன்று சிங்களத்தில் 'ஜெயசிக்குறு' (தமிழில் வெற்றிநிச்சயம்) என்று பெயரிடப்பட்டு மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழியாகப் பாதை கைப்பற்றல் என்பதே அதன் இலக்கு. இன்று சர்சைக்குள்ளான ஏ-9 நெடுஞ்சாலைதான் அந்தப்பாதை. தொடக்கத்தில் மூன்றுமாத காலத்துள் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டுத் தொடங்கப்பட்ட நடவடிக்கை இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்டு இறுதியில் கைவிடப்படுவதாக 04.12.1998 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான மோதல்கள் பலவிடங்களில் நடந்தன. ஏ-9 நெடுஞ்சாலையைத்தான் கைப்பற்றுவது என்ற நோக்கிலிருந்து சாத்தியப்பட்ட எவ்வழியாயினும் சரிதான் என்ற நிலைக்கு அரசு வந்து பலமுனைகளில் பாதைதிறக்க முயற்சித்து முடியாமற்போனது.
இக்காலத்தில் சில ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர், மேலும் சில படையினர் காயமடைந்தனர். ஏராளமானோர் இராணுவத்தைவிட்டுத் தப்பியோடினர்.
இக்காலகட்டத்தில்தான் புலிகளின் போரிடும் ஆற்றல் அபரிதமான வளர்ச்சியடைந்தது.
தொடக்கத்தில் மெதுமெதுவாகப் பின்வாங்கிவந்து ஒருகட்டத்தில் நிலையான பாதுகாப்பரணை அமைத்து மாதக்கணக்கில் முறியடிப்புச்சமரை நடத்தினர்.
வன்னியை இனிமேலும் விட்டுக்கொடுப்பதில்லையென்ற ஓர்மத்தோடு போராடினர்.
இடைப்பட்ட கால்ததில் கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் டிசெம்பர் நாலாம்நாள் 'ஜெயசிக்குறு' நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து 'றிவிபல' என்ற பெயரில் ஒட்டுசுட்டான் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. ஒருதுப்பாக்கி வேட்டுக்கூட தீர்க்கப்படாமல் ஒட்டுசுட்டான் மண் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டரை ஆண்டுகள் நடத்தப்பட்டுக் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளையும், மேலதிகமாக பல பகுதிகளையும் புலிகள் ஐந்தேநாளில் படையினரிடமிருந்து மீட்டெடுத்தனர் என்பது வரலாறு.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரமான பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு
_________________________________________________
டிசெம்பர் ஐந்தாம்நாள்.
யாழ்ப்பாணத்தில் ரத்வத்த சிங்கக் கொடியேற்றி தமிழர்மீதான தமது வெற்றியைப் பறைசாற்றியநாள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென்று 'றிவிரச' என்றபேரில் பாரிய படையெடுப்பைச் செய்த படையினர், மாவீர்நாளுக்குள் யாழ்நகரைக் கைப்பற்றி பிரபாகரனின் பிறந்தநாளன்று அல்லது மாவீரர்நாளன்று கோட்டையில் கொடியேற்றுவது என்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அத்திட்டம் கைகூடாமல் டிசெம்பர் ஐந்தாம்நாள் யாழ்.கோட்டையில் சிங்கக்கொடியை ஏற்றி வெற்றிமுழக்கமிட்டனர்.
அவ்வகையில் இதுவொரு கரிநாள்.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, வன்னி
Thursday, November 23, 2006
மாங்குளம் முகாம் தகர்ப்பு - நினைவுமீட்டல்
21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது.
இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது.
அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.
வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிங்களப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - இன்று ஏ-9 என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்கும் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள்.
வவுனியாவுக்கும் பரந்தனுக்குமிடையில் இருந்த இவ்விரு முகாம்களும் வன்னியைத் துருத்திக்கொண்டே இருந்தன.
சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான்.
வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் அன்றே உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவதென்று முடிவெடுத்தனர்.
அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே தாக்குதலும் நடந்தது.
இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராச்சின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
அப்போது பிரபலமாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவுமிருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் -2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு தாக்குதலைச் செய்தன புலியணிகள்.
முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித்தாக்குதல் நடத்துவதென்பது திட்டம். முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாமின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.

மாங்குளம் படைமுகாம் வன்னிக்காட்டில் தனித்து நின்ற ஒரு படைமுகாம். ஒன்றில் காடுவழியாக முல்லைத்தீவுப் படைத்தளத்துக்கோ அல்லது வவுனியாப் படைத்தளத்துக்கோதான் செல்ல முடியும். மாங்குளம் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் காடுகளில் புகுந்து திக்குத் தெரியாது ஓடினர். அவர்களைத் தேடுவதில் புலியணிகளோடு வன்னி மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இம்முகாம் தாக்குதலில் 65 வரையான விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
______________________________________-
தொடக்கத்திலேயே வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த, கண்டிவீதியைத் துண்டாடியிருந்த இரு படைமுகாம்களை அவசரஅவசரமாகக் கைப்பற்றியதன்மூலம் பின்னாளில் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்குரிய அத்திவாரத்தை இட்டனர் புலிகள். வன்னியில் எஞ்சியிருந்த ஒரே படைத்தளமான முல்லைத்தீவையும் பின்னர் கைப்பற்றி, அகன்ற வன்னிப்பகுதியைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தனர். இதன்மூலம் இன்றுவரை போராட்டத் தலைமை வன்னியில் இக்கட்டின்றி செயற்பட, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தக்க வழிகோலினர் புலிகள்.
அன்று மீட்கப்பட்ட அந்த வீதிக்காக பின் ஆயிரம் சண்டைகள் நடந்தன. இன்றுவரை அந்த வீதிக்காக சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.
_____________________________
படம்: அருச்சுனா
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர், வன்னி
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்
1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.
இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.
இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.

இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.
அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.

மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.
மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.
இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.
ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.
ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.
அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.
சம்பந்தமுள்ள வேறுபதிவு.
-வன்னியன்-
02.11.2005.
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மக்கள் எழுச்சி, வன்னி
Tuesday, April 18, 2006
குறிதவறிய சூடும் திருவள்ளுவரும்.
"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.
சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது."
வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.
1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )
தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)
பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.
'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.
தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?
பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.
தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.
"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,
"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.
"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.
அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.
பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"
Labels: அலட்டல், அனுபவம், நட்சத்திரம், பகிர்தல், வன்னி
Friday, March 03, 2006
Building the Tamil Eelam State....
Building the Tamil Eelam State:
Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka
Sometimes when I have felt a little depressed I would go to Parliament to sit in the public gallery and look down at all those ‘terrorists’ now occupying the government benches. It is something to lift the heaviest heart to behold those who were regarded by the previous apartheid government as the most dangerous terrorists, and who now, in the new democratic dispensation, are the Hon. Minister of this or that. I would recall that some of them were fellow marchers in rallies against the awfulness of partheid, and with some we were targets for teargassing, and now here they are, members of a democratically elected National Assembly. (Tutu 2000: vii)
The quote from the South African Archbishop Emeritus Desmond Tutu points to the discursive contestation over nationalist struggles – where a militant movement may be alternatively described as ‘freedom fighters’ or ‘terrorists’ – but also to the political transformation of such movements during transitions to peace and democracy. Although Tutu’s statement refers specifically to the transformation of the African National Congress during South Africa’s transition to liberal democracy, his observations resonate with the politics of naming and transforming the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Sri Lanka. Thus, Nadarajah and Sriskandarajah (2005) show that the language of terrorism has been used to deny LTTE international legitimacy and thereby undermine their political project of Tamil self-determination. Much less has been written about the on-going political transformations within the LTTE. This is surprising and unfortunate, especially since the LTTE is involved in a state building project which may also yield a transformation of the movement itself. The overall purpose of the present article is to address this knowledge gap in regard to the emerging state in North-East Sri Lanka. Based on interviews with the leadership of key LTTE institutions,2 the following sections examine the process of state formation in LTTE-controlled areas, with an emphasis on the functions that are being served and the forms of governance that are embedded in the new state institutions.
The LTTE state structure
The Liberation Tigers of Tamil Eelam have for more than two decades sought to deliver self-government for the Tamil nation and homeland (Tamil Eelam) through armed struggle interspersed with ceasefires and peace negotiations (Balasingham 2004, Swamy 2003). Since 2002, in the context of the 5th peace process,3 there has been a partial shift from military to political means, with a prominent position for the LTTE Political Wing and a comprehensive state apparatus emerging in LTTE-controlled areas. Through a series of military victories in the late 1990s, LTTE had brought extensive areas under its control and created a certain military parity of status with the Government of Sri Lanka (Balasingham 2004, Uyangoda and Perera 2003). Thus, the third Eelam War (1995-2001)4 ended in a military deadlock which together with economic crisis, regime change and favourable international conditions led to a Ceasefire Agreement on 22 February 2002 and subsequent peace negotiations in 2002- 2003.
என்று மேலும் நிறையத் தகவல்களோடு தொடர்ந்து செல்கிறது கட்டுரை.
இறுதியில்,
Conclusion
Sri Lanka’s third Eelam War created a political-territorial division of the island with a resultant dual state structure in the North-East. In the context of the 2002 Ceasefire Agreement and based on earlier institutional experiments, the LTTE is currently engaged in a comprehensive process of state building within the areas they control. Within this emerging state apparatus there has been a strong focus on external and internal security issues, with an additional emphasis on social welfare and economic development. The dominant form of governance embedded in the LTTE state institutions is that of a strong and centralised state with few formal institutions for democratic representation, but there are also elements of partnership arrangements and institutional experiments that may serve as a basis for more democratic forms of representation and governance. This is contingent, however, on both a peaceful resolution of the current state of insecurity for Tamils and the LTTE, and on the facilitation and dynamics of pro-democracy forces within the LTTE and in Tamil society at large.
Acknowledgements
This research project has been supported by the Norwegian Research Council. The fieldwork in Kilinochchi was facilitated by LTTE Peace Secretariat. I am deeply grateful to the Peace Secretariat and especially to the Secretary General S. Puleedevan for their invaluable assistance. Mr. Yarlavan at the Peace Secretariat was relentless in his efforts to arrange interviews and facilitate my fieldwork in every possible way. In Oslo, Yogarajah Balasingham has been very helpful in arranging meetings with visiting delegations from North-East Sri Lanka. I am also grateful to the participants in a Nordic Workshop on “War and Peace in Sri Lanka” (Uppsala University, 26-27 January 2006) for valuable comments on an earlier draft. Needless to say, the interpretations and arguments contained in this article remain my sole responsibility.
என்று முடிகிறது.
முழுக்கட்டுரையும் படிக்க,
Building the Tamil Eelam State:
Labels: துயர் பகிர்தல், வரலாறு, வன்னி
Wednesday, November 02, 2005
ஓயாத அலைகள் மூன்று
இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்
1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.
இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.
இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.

இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.
அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.

மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.
மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.
இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.
ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.
ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.
அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.
சம்பந்தமுள்ள வேறுபதிவு.
-வன்னியன்-
02.11.2005.
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, வரலாறு, வன்னி
Monday, August 01, 2005
போராளிக் கலைஞன் சிட்டு
(இணைப்புக்கள் திருத்தப்பட்டுள்ளதன.)
தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.
விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய
‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’
என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.
ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.
-----------------------------------------------------------
சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று:
“கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.
புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.
“சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.
அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்”
இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.
நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை,
“வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ”
எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.
அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.
சிட்டண்ணை பாடிய சில பாடல்கள்:
உயிர்ப்பூ திரைப்படத்துக்காக அவர் பாடிய பாடல்.
சின்னச் சின்னக் கண்ணில்.
சிட்டுவின் முதற்பாடல்.
கண்ணீரில் காவியங்கள்
திருமலைத் துறைமுகத்தில் எதிரியின் கடற்கலங்களை மூழ்கடித்த கரும்புலிகள் நினைவாக பாடிய பாடல்.
விழியில் சொரியும் அருவிகள்
கடற்கரும்புலிகள் நினைவான இன்னொரு பாடல்
பகைவிளையாடிடும்
கொழும்புத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தி எதிரியின் கடற்கலங்களை மூழ்கடித்த பத்துக் கரும்புலிகள் நினைவாக பாடிய பாடல்
விடியும் நேரம்
சிட்டு அண்ணை நினைவாக மற்றவர்கள் பாடிய பாடல்
சிட்டு சிட்டு
Labels: நினைவு, மாவீரர், வரலாறு, வன்னி
Subscribe to Posts [Atom]