Wednesday, February 07, 2007

கெளசல்யன், சந்திரநேரு நினைவு தினம்

விடுதலைப்புலிகளின் மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராயிருந்த லெப்.கேணல் கெளசல்யன் (சாள்ஸ் பாபேஜ் - மட்டக்களப்பு), மாமனிதர் சந்திரநேரு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பயணம் செய்துகொண்டிருந் வேளையில் சிறிலங்கா அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று.

07.02.2005 அன்று வன்னியிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த இவர்களின் வாகனம் மீது புனானைப் பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவத் தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் கெளசல்யன், சந்திரநேரு ஆகியோரோடு மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ஆம் லெப். விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

லெப்.கேணல் கெளசல்யன் அவர்கள் சுனாமி அனர்த்தத்தின்பின்னான கிழக்கு மாகாண மீள் கட்டமைப்புக்கு அரும்பங்காற்றியவர். தமிழ் - முஸ்லீம் உறவைச் சீர்செய்ததில் முக்கிய பங்கு இவருக்குண்டு. மிகச்சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த இவரைத் தீர்த்துக்கட்டுவதில் எதிரிகள் மிக மும்முரமாக இருந்தார்கள்.

இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவுக்கு, பின்னர் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியத்துக்காக இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த அனைவருக்கும் எமது அஞ்சலி.

Labels: , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]