Saturday, June 04, 2005

எழுத்தாளர் நந்தி காலமானார்.

முதுபெரும் தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் நந்தி சி.சிவஞானசுந்தரம் (வயது 77) நேற்று சனிக்கிழமை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழ் இலக்கியத்திற்காக அவர் நந்தி எனும் புனைபெயரில் பாரிய பங்காற்றியவர்.
மருத்துவ அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் மேல்மாகாணத்திலும் யாழிலும் பணியாற்றினார். பின்னர் யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தொடங்குவதற்கு பெரும் முன்முயற்சிகளை மேற்கொண்டவர் நந்தி சிவஞானசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி - புதினம்.

Labels: , ,


Comments:
அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்
 
எழுதிக்கொள்வது: kulakaddan

பெராசிரியர் சிவஞானசுந்தரம் [நந்தி] அவர்களது மறைவு...வருத்ததை தருகிறது. ஆழ்ந்த அனுதாபங்கள் தகவலுககு நன்றி

11.10 5.6.2005
 
வன்னியன்
தகவலுககு நன்றி

அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]