Tuesday, July 04, 2006

அத்திவாரக் கற்கள்

"அழகு மாணிக்கங்களாயல்ல.... அத்திவாரக்கற்களாய்..."

பொதுவாக யாருக்குமே தம் பெயர் புகழடைவதில் மகிழ்ச்சியுண்டு. தம் பெயரைப் பிரபலப்படுத்திப் புகழடைய பெரும்பான்மையானோர் பின்னிற்பதில்லை. வாழும்போது மட்டுமில்லை, இறந்தபின்னும் தம் பெயர் நிலைத்து நிற்கவேண்டுமென்ற விருப்பம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. இது மனித இயல்பு.

ஈழப்போராட்டத்தில், தம் உயிர்களை ஈந்தவர்கள் பலவிதமானவர்கள். அவர்களுக்களிற் பெரும்பான்மையோருக்கு உரிய கெளரவம் வழங்கப்படுகிறது. வீரமரணமடைந்தவர்களுக்குக் கல்லறைகளுண்டு. வித்துடல் கிடைக்காதவர்களுக்கு நடுகற்களுண்டு. அவர்கள் பற்றிய வரலாறுகள், குறிப்புக்களுண்டு. அவர்கள் பெயர்களில் வீதிகள், விளையாட்டரங்கங்கள், கல்விச்சாலைகள் எனப் பலவுண்டு. மாவீரர்களாக இராணுவ நிலைகளுடன் அவர்களின் பெயர்விவரங்கள் வெளியிடப்படும். பெற்றோர், குடும்பத்தினர் கொளரவிக்கப்படுவார்கள்.

இதேபோல் வெளித்தெரியாத பல தியாகங்களும் ஈழப்போராட்டத்திலுண்டு. வாழும்போதுமட்டுமன்றி, சாகும்போதும் தம் சுயத்தை அழித்துச் சென்றவர்கள் அவர்கள். அவர்களின் பெயர்கள் மாவீரர் பட்டியலில் வரா. அவர்களைப் போராளியாக யாருக்கும் தெரியாது. வாழ்ந்த சுவடும் தெரியாது; செத்த சுவடும் தெரியாது. தாய்க்குக்கூட தன் பிள்ளையைத் தெரியாது. அவர்களையறிந்த சிலருக்கு மட்டுமே அவர்களைப் பற்றியும் என்ன நடந்ததென்பது பற்றியும் தெரியும். அது அவர்களோடே இருந்துகொள்ளும். இறந்த பின்னும் தங்கள் பெயர்களை வெளித்தெரியாதபடி மறைத்தவர்கள் அவர்கள்.



இவர்கள் ஒவ்வொருவரும் அத்திவாரக்கற்களே. எதிரியின் குகைக்குள் அவனது அத்திவாரத்தை அசைத்தவர்கள். இவர்களின் ஒவ்வொரு சாவும் போராட்டத்தின் பெரிய பாய்ச்சலே.

இவர்களின் வாழ்க்கையே வித்தியாசமானது. அவர்களின் இறுதிநாட்கள் பெரும்பாலும் போர்ச்சூழலுளிருந்திருக்காது. ஆடம்பரமான, பகட்டான, தடம்புரள ஏதுவான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் உல்லாச உலகத்துள்ளும் மனம்பிரளாது பாதைமாறாது காரியத்திற் கண்ணாயிருந்தவர்கள்.

இதுவரை வீரச்சாவடைந்து வெளியிடப்பட்ட 275 வரையான கரும்புலிகளோடு இந்நாளில் இவர்களையும் நினைவு கூர்வோம்.

இவர்கள்
"நாற்றங்கள் நடுவே வாழ்ந்திட்ட முல்லைகள்
சேற்றுக்குட் சிக்காத தாமரை மொட்டுக்கள்"


இவர்களை நினைத்து இருபாடல்களை இங்கே பதிவிடுகிறேன்.

முதற்பாடல்:
"வாய்விட்டுப் பெயர்சொல்லி அழமுடியாது - வெறும்
வார்த்தைகளால் உம்மை தொழமுடியாது.
தாய்க்குத் தன் பிள்ளையின் முகம்தெரியாது -எங்கள்
தலைமுறை உங்கள் பெயர் அறியாது."


இதைவிட அழகாக யாராற் சொல்லிவிடமுடியும்?






-------------------------
அடுத்த பாடல்,

"ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்-இது
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
"







____________________________
இதுவோர் மீள்பதிவு.

Labels: , , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]