Wednesday, February 21, 2007

புலியாக நினைத்த நரியும் தமிழ்தெரியாத உணர்வுகளும்

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எண்டு பதிவு வந்திருக்கு.
நரி, நரியாகவே இருந்துவிடுவது நல்லதுதான்.
நரி புலிவேஷம் போடுறது உண்மையான புலிகளுக்கு ஆபத்து.

வன்னியனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாதா எண்ட சொறிக்கேள்வி வேறு கேட்டிருக்கிறார்.
யாருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது?
"உணர்வுகள், தான் கேள்விப்பட்டவற்றைத் திரும்பத் திரும்ப உண்மைபோலச் சொல்கிறார்" என்றுதான் முன்னர் இட்ட பதிவில் எழுதியிருந்தேன். அதைக்கூட விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவருக்கு இவைபற்றி நேரில் ஏதும் தெரியாதென்பது நான் ஏற்கனவே விளங்கிக்கொண்ட விடயம்.
பெயரிலி தன் பின்னூட்டத்தில் என்ன எழுதினார் என்பதையே விளங்க முடியாமல், பதிவுபோட்டவர் என்னைப்பார்த்துக் கேட்கிறார் இக்கேள்வி.

முதலில் அவரின் பொய்களை மறுத்து எழுதிய கருத்துக்களுக்கு எந்தப்பதிலுமே அவரால் வைக்கப்படவில்லை. வைக்கவும் முடியாது. போகிற போக்கில் பிரபாகரன் அப்படி, புலிகள் இப்படி என்று பொய் சொல்லிவிட்டுப் போவதைத்தவிர அவரால் எதையும் எதிர்கொள்ள முடியாது. தான் சொன்ன தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இல்லை.
பிரபாகரன் வீட்டு நாய்க்கு இவரைப்பற்றித் தெரியும் என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
அல்லது அந்த நாய்கூட தன் எதிராளிகளின் கூற்றை நம்பாது என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
(மேற்குறிப்பிட்ட இருகேள்விகளையும் சேர்த்து வாசிக்கவும். பிறகு வன்னியனுக்குத் தமிழ்தெரியாது எண்டு இன்னொருக்காச் சொல்லக்கூடாது.)
தான் சொல்வதெல்லாம் உண்மை என்பதையா?

புலிகள் இயக்கத்தில் மதங்கள் கையாளப்படும் விதம்பற்றி இவ்வளவு எழுதியபின்னும் அதைப்பற்றி ஒரு பேச்சில்லை, ஆனால் மதம் இன்னும் முக்கியமாகவே இருக்கிறது என்று திரும்பவும் சொல்லிவிட்டுப் போகிறார்.

தனக்குத்தானே பின்னூட்டமிடுவது யாரென்று இங்கு எல்லோருக்கும் தெரியும். அதைவிட்டுவிடுவோம்.
அவரைப்போல இல்லாமல் நாங்கள் எல்லாப் பின்னூட்டங்களையும் வெளிய விடுறம் எண்டதுதான் அவருக்குப் பிரச்சினைபோல.
பெயரிலியின் பெயரிணைப்பு எந்தவலைப்பதிவுக்கும் இட்டுச்செல்லவில்லையென்றால் அவர் போலி, ஆனால் ஆரூரானுக்கு ஆதரவாக கும்மாங்குத்து குத்துபவர்களும் அப்படியே இருந்தாற்கூட அவர்களைக்குறித்து எக்கருத்துமில்லை.

நான் அவரின் பதிவிலே ஒரு பின்னூட்டமி்ட்டது உண்மை. 'நான் உங்களுக்கு மறுப்புப்பதிவொன்று இட்டுள்ளேன்' என்ற விவரத்தை ஒரு பின்னூட்டமாக அங்கு இட்டேன். அதை வலைப்பதிவுலகில் ஒரு நடைமுறையும்கூட. ஆனால் இந்தப் பதிவருக்கு அது வேறுமாதிரித்தெரிகிறது.
தனது பதிவிலிருந்து என்பதிவுக்கு ஆட்களை வரவைக்கவே நான் அந்தப்பின்னூட்டத்தை இட்டேனாம். தான் அதை வெளியிட மாட்டாராம்.
இவரது கதைப்படியே இருந்தாலும்கூட, தனது பதிவுக்கு மறுப்புப்பதிவொன்று இடப்பட்டுள்ளதென்பதையே மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதென்று மறைக்க முற்படும் இந்த மனநோயாளியைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நான் பதிவுபோட்ட காரணமே அவர் தனக்குப் பாதகமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதால்தான்.
கருத்துலக பாசிசத்தை நடத்திக்கொண்டு பெரிய கருத்துக்களம் நடத்துகிறாராம்.

இப்போது நிதர்சனத்தை புலியாதரவு என்றுவேறு அடுத்த கோமாளித்தனம் செய்ய முற்பட்டுள்ளார். நிதர்சனத்தை எதிர்ப்பவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் என்கிறார். நிதர்சன ஆதரவிலேயே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய மனநோய் பிடித்தவர் என்று. நிதர்சன ஆதரவுப்புத்தியோடே இயங்கும் இவரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
நிபந்தனையின்றி நிதர்சனத்தை எதிர்ப்பவர்களின் நானுமொருவன்.
எங்களை புலியெதிர்ப்பாளராக்கிவிட்டு இந்தக் கோமாளிதான் புலியாதரவாகிவிட்டார்.

தனது பழைய பதிவுகளை வாசித்தால் தன்னைப் புரிந்துகொள்ளலாம். ஆம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்பனீயத்தை காரசாரமாக எதிர்த்து எழுதிக்கொண்டிருதபோது எப்படி இடையில் தடம் மாறியது, பின் பார்ப்பனீயத்தை ஆதரிக்கவேண்டியதே ஈழத்தமிழர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று எழுதுமளவுக்குப் போனது, இடையில் கிடைத்த இந்திய இந்துத்துவவாக்களின் ஏகோபித்த ஆதரவு, இன்று உணர்வுகள் என்ற வலைப்பதிவு இருக்கும் அரசியல் நிலை என்ன என்பவற்றைத் தெளிவாகவே பார்த்துக்கொண்டு வருகிறோம்.
ஆனால் ஆரூரான் மட்டும் பழையவற்றைத் தேட மாட்டாராம். வன்னியனைத் தேடுறதை விடுவம். பெயரிலி இவ்வளவு காலமும் என்ன எழுதினார், ஆறுமுகநாவலருக்காக அவர் இந்தியத் தனத்தோடு எவ்வளவு சண்டைபிடித்தார், ஈழத்தேசியத்தில் பெயரிலியின் நிலையென்ன என்பவற்றை அறியாமல் - அறிந்துகொள்ள விருப்பின்றி துரோகிப்பட்டம் கொடுக்கும்போது இந்த ஆராயும் தன்மை எங்குப்போனது? நிதர்சனப் புத்தியின் தொடர்ச்சிதானே?

முதலில் கருத்துச்சொன்னவர்களைக் குறிப்பிட்டு பதிவெழுதிறது நல்லது. அவரின்ர கடசிப்பதிவில சொல்லியிருக்கிறதுகள் ஏதோ பொத்தாம்பொதுவாச் சொல்லப்படுது. அதில சொல்லியிருக்கிற கருத்துக்கள் பல எனக்குரியதில்லை. ஆனா ஏதோ வன்னியனுக்குரிய மாதிரி எழுதப்பட்டிருக்கு. அவர் விமர்சிக்கிற கருத்துக்களை யார்யார் எழுதினார்கள் என்பதைத் தனித்தனியக் குறிப்பிட்டு விமர்சித்தால் நன்று. அதுவொரு ஒழுங்குமுறை.

பின்னூட்டங்களை மறுப்பது பதிவரின் உரிமையாம். அதை யாரும் கேள்விகேட்க முடியாதாம்.
ஐயா ராசா, அது உங்கள் உரிமைதான். நீங்கள் ஏதோ உங்கட வீட்டுப்பிரச்சினை பற்றிக் கதைச்சு நாங்கள் வந்து சும்மா உங்களோட தேவையில்லாமல் தனகிக்கொண்டிருக்கிறோம் எண்டோ நினைக்கிறியள்?
ஈழத்தவரின் அரசியல் பிரச்சினை இது. நீங்கள்மட்டும்தான் ஈழத்தவர் எண்டில்லை. நாங்களும்தான். நாங்கள் மட்டும்தான் எண்டில்லை. நீரும்தான்.
நீர் ஈழுத்தவர் சார்பா ஒரு கருத்துச் சொன்னால் - அதுவும் ஈழத்தவரின் கருத்து இதுதான் எண்டு நீர் அடிச்சுச் சொல்லேக்க அது மாற்றுக்கருத்து எங்களிட்ட இருக்கிறதால அதைச் சொல்லவேணும். அப்பிடியில்லாட்டி நீர் சொல்லிறதுதான் சரியெண்டு நிலைச்சிடும். அதைத்தான் நீரும் விரும்பிறீர்.
பின்னூட்டங்களை நிப்பாட்டிறதெண்டா முழுக்க நிப்பாட்ட வேணும். அதென்ன உமக்கு ஆதரவாயும் உமக்குப் பெரியளவில பாதகமாயில்லாதுகளாயும் பாத்து மட்டும் விடுறது?

முதல் பின்னூட்டத்தில போலி எண்டு விளிச்சதை விளக்கி அடுத்த பின்னூட்டம் போடக்கூட ஒருவனுக்கு அனுமதியில்லையெண்டால் பிறகென்ன மண்ணாங்கட்டிக்கு நீர் பதிவு நடத்திறீர்? நீர் ஒருத்தனைக் கண்டபடி திட்டலாம், ஆனா திட்டுவாங்கிறவன் தன்ர நியாயத்தைச் சொன்னால் அதை ஒளிச்சு வைச்சிடுறதோ? என்னப்பு நியாயம்?
இதுக்குள்ள பெரிசா விவாதம் நடத்த வந்திட்டார். அவருக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இன்னும் கொஞ்ச அனானிகள்.

தன்ர பின்னூட்டம் வெளிவராட்டி ஒருவன் நியாயம் கேட்கத்தான் செய்வான்.
தமிழ்மணத் திரட்டியில மட்டுறுத்தலைச் செய்யச்சொல்லி நிர்வாகம் அறிவித்தபோது, வலைப்பதிவு உரிமையாளர் தனக்குப்பிடிக்காத பின்னூட்டங்களை நிறுத்திவிடுவார் என்று சிலரால் சொல்லப்பட்டது. ஆனா நீர்தான் அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறீர்.
நல்லது தொடர்ந்து செய்யும்.

ஆனா உந்த புலியாதரவுப் பூச்சாண்டி காட்டி பேக்காட்டாதையும்.
அப்பிடியே வடிச்செடுத்த "யாழ்"த்தனத்தோட வந்திருக்கிறீர்.
(இதை யாழ்ப்பாணத்தனமென்றோ யாழ்.கொம் தனமென்றோ வசதிபோல் எடுக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐயா இன்னொரு கேள்வி.
கேள்வியில்லை சவால் எண்டே வைச்சுக்கொள்ளும்.
இஞ்ச வலைப்பதிவுலகில ஈழத்தமிழர்கள் பலர் வலைப்பதிவு வைச்சிருக்கினம்.
இதில எத்தினைபேர் உம்மோட முழுக்க ஒத்துப்போயினம் எண்டு ஒருக்கா யோசிச்சுப்பாரும்.
ரெண்டுபேரைத்தவிர மிச்ச ஆக்கள் ஏதோவொரு விதத்தில முரண்பட்டுத்தான் நிக்கினம்.
அந்த ரெண்டுபேர்கூட (வெற்றி, மயூரேசன்) "ஈழத்தில சாதிப்பிரச்சினை முடிஞ்சுபோச்சு" எண்டு வண்டில் விடுறதிலதான் உம்மோட துணைநிற்கினம். மற்றும்படி அவர்களுக்கும் உம்மோட கருத்துவேறுபாடு நடந்திருக்கு.

பிறகெப்படியப்பன் நீர் சொல்லிறதுதான் ஈழத்தமிழரின்ர குரல் எண்ட நினைப்போட தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறீர்?
நிறையப்பேர் ஆதரித்தால்தான் அது சரியான கருத்தென்று நான் சொல்லவரவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அரசியற்பார்வையில்லை, எனக்கு மட்டும்தான் உண்டு என்று மமதையோடிருப்பதும் மற்றவர்க்கான கருத்துரிமையை மறுக்கும் பாசிசப்போக்கும் ஆபத்தானவை என்பதைச் சுட்டவும் உங்களை ஒரு சுயவிமர்சனத்துக்கு யோசிக்க வைக்கவுமே இது.
___________________________________
பூராயத்தில் பொதுவாக இப்படியான தனிநபர் சிக்கல் தொடர்பாகப் பதிவிடுவதில்லை.
இரண்டு வருடகாலத்தில் கறுப்பிக்கென்று ஒருபதிவும் சிறிரங்கனுக்கென்று ஒருபதிவும் இட்டுள்ளேன். இப்போது இந்தத் தொல்லை.

Labels: ,


Comments:
வன்னியன்!

பல்வேறுபட்ட புறச்சூழல்களைக் கருத்தில் கொண்டு இவ்விவாதம் குறித்து, இதுவரையில் எதுவும் நான் சொல்லவில்லை. ஆனாலும் கருத்துக்களைக் கருத்துக்களால் வெல்ல முனையும் முன்முயல்வும், உங்கள் வாதங்களும், நியாயமானவை என்றுணர்கின்றேன்.
நன்றி.
 
This comment has been removed by the author.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]