Thursday, April 07, 2005

கலைஞன் ஒருவனின் இழப்பு.

விழிசிட்டி என அறியப்பட்ட க.சிவராசா எனும் கலைஞன் காலமாகிவிட்டார். இச்செய்தியை இன்று எனக்குக் கிடைத்த வெள்ளி நாதத்தில் கண்டேன். எனக்கு அவரை வானொலி நாடகத் தயாரிப்பாளராகவே அறிமுகம். புலிகளின் குரல் வானொலியில் நாடகத்தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் அவர் பணிபுரிந்த காலங்களில் அவர் குரலையும் நிகழ்ச்சிகளையும் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன். பின்னர் நேரே சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அவரோடு கதைத்துள்ளேன். மிகுந்த உற்சாகமான, மென்மையான மனிதர்.

வானொலி நாடகங்கள் தயாரிப்பதிலுள்ள சிக்கல்களையும் மற்றவற்றுக்கும் இவற்றுக்குமுள்ள வித்தியாசங்களையும் அழகாக விவரிப்பார். அவரும் யோகேந்திரநாதனும் சேர்ந்து செய்த தொடர் நாடகங்கள் இன்றும் மனத்தில் பசுமையாக இருக்கிறன. பின்னர் நிதர்சனத்திலும் இணைந்து பணியாற்றியவர். இவரது இழப்பு புலிகளின் குரலுக்கு நிச்சயம் பெரியதாய் இருக்கும்.பல சிறுகதைகள் வானொலி நாடகங்கள் என்று பல படைப்புக்களை உருவாக்கியிருந்தாலும் இவரது ஆக்கங்கள் எதுவும் இதுவரை நூலுருப்பெறவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. அவையும் விரைவில் நடைபெறும் என்று நம்புவோம்.அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: மகிழன்

எனக்க அளைத் தெரியாது. இருந்தாலும் என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள்.


10.24 8.4.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]