Saturday, April 30, 2005

மாமனிதன் சிவராம்

வணக்கம்!

இன்று அனைத்துலகத் தொழிலாளர் நாள். இந்நாளில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுடன் நானும் இத்தினத்திற் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பத்திரிகையாளன் சிவராமுக்கு என் கண்ணீர் அஞ்சலி. உலகறியப்பட்ட ஒரு தமிழ்ப்பத்திரிகையாளன். தனக்கு ஆபத்துள்ளது என்று பல்வேறு சந்தர்ப்பங்களிற் சொல்லியிருந்தும் ஒழிந்து திரியாமல் பங்காற்றிய பத்திரிகையாளன். துணிவாகப் பல விடயங்களைக் கூறுவதுடன் ஆழமான புலமையும் கொண்ட ஆய்வாளன். முன்னாள் போராளி என்பதும் அவருக்குக் கூடுதற் பலமாயிருந்திருக்கும்.

இவரது கொலை சம்பந்தமாக தமிழகப் பத்திரிகைகள் கருத்துக் கூறிவில்லையென்ற வாதம் வந்துள்ளது. இந்துப் பத்திரிகையின் வேடம் பற்றியும் ராம் வாட்ச்சில் பேசப்பட்டுள்ளது. சிவராமின் கொலைபற்றிக் கருத்துக்கூறாதவர்களைச் சாடியும் கருத்துக்கள் வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை கருத்துக் கூறாதவர்கள் கவலையற்றவர்களென்றோ எதிரானவர்களென்றோ கருத முடியாது. இதற்குக் கவலை கொள்ளும்படி யாரையும் கெஞ்சவும் முடியாது. அவர்களுக்குச் சிவராமைப் பற்றித் தெரிந்திருக்கவும் நியாயமில்லை, எமக்குக் கீழ் வெண்மணி, திண்ணியம் இன்னும் இன்றும் நடந்துகொண்டிருக்கும் பல பிரச்சினைகள் தெரியாதது போலவே.

ஈழத்தமிழ் ஊடகங்களிற்கூட அவரின் கொலை பற்றிப் பல்வேறான கருத்துக்கள். பெரும்பாலானவை ஈடு செய்ய முடியாத இழப்பு என எழுத இந்தக் கொலையில் மகிழ்ச்சி தெரிவித்துக்கூட இணையத்திற் கட்டுரை வந்துள்ளது. அது அவர்களுக்கு மகிழ்ச்சி. பல கொலைகளுக்காக மகிழ்ந்தவன் என்ற வகையில் இவர்களின் இந்த மகிழ்ச்சியை என்னாற் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தின்போது மகிழ்ச்சியடைந்தவன் என்ற வகையில் என் துக்கத்தின்போது அவர்கள் பங்கேற்கவேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது. கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து புலிகள் தான் இவரைக் கொன்றார்கள் என்று ஆலாபனையும் தொடங்கிவிட்டது.

நிற்க, சிவராமின் பழைய சிலவற்றைத் தூக்கிப்பிடித்து அவரைப்புலிகளுக்கு எதிரானவராகவோ இரட்டை நிலைப்பாடு கொண்டவராகவோ சிலர் சித்தரிக்கிறார்கள். நிலைப்பாடு என்பது பல்வேறு காரணங்களால் மாறுபடுவது. அது புலிகளுக்கும் தெரிந்துதான் உள்ளது. இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. குமார் பொன்னம்பலம் உட்பட நிறையப்பேரின் மாற்றம் கவனிக்கத்தக்கது. அதுபோல்தான் தராகி எனும் சிவராமினதும். இப்போது அவருக்குத் தமிழீழத் தேசியத்தலைவரால் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை சிவராமின் இழப்புப் பாரியது. மொழியாளுமை மிக்க இராணுவ, அரசியல் ஆய்வாளனின் இழப்பு மிகப்பெரியதுதான். குமார் பொன்னம்பலத்தைப் போலவே முடிவு தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே கர்ஜித்தவர் சிவராம். அன்னாரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாராவது சிவராமைப் பற்றிச் ‘சலனப்படம்’ எடுங்களேன். ‘ஈழப்பிரச்சினையை ஒட்டுமொத்தமாய்’ ஒரு சலனத்துள் அடக்கிவிடுவோம்.

Labels: , , ,


Comments:
எழுதிக்கொள்வது: ANONYMOUS

walla pathivu. THATSTMAIL.COM sivarAma kolai paRRi solliyuLLathu.
http://thatstamil.indiainfo.com/news/2005/04/30/lanka.html

23.57 30.4.2005
 
இணைப்புக்கும் கருத்துக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]