Sunday, July 03, 2005

விடுதலைப் புலிகளின் உந்துருளிப் படையணி

விடுதலைப் புலிகளின் உந்துருளிப் படையணியின் இரண்டாவது அணி பயிற்சி முடித்து வெளியேறியுள்ளது. அதன் பயிற்சி நிறைவு நிகழ்வு வன்னியில் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே ஓர் உந்துருளிப் படையணி பயிற்சி முடித்து வெளியேறி கடமையிலீடுபட்டுள்ளது.


விடுதலைப் புலிகளின் படைப்பலமே ஈழத்தமிழரின் பாதுகாப்புக்கும் பேரம் பேசும் பலத்துக்கும் அடிப்படையாகும். படைப்பலம் கட்டியெழுப்பப்படாதவிடத்து உலகநாடுகளும் சேர்ந்து மிளகாயரைத்து விடுவார்கள். இன்றைய போர்நிறுத்த நிலையில் புலிகள் ஏன் படைவலுவைப் பெருக்கிறார்கள் என்ற விமர்சனம் (விசமத்தனம்) பலரால் வைக்கப்படுகிறது. அடிப்படையில் போர் தொடங்காமலிருப்பதற்குக் கூட படைப்பலப் பெருக்கம் அவசியம். சிங்கள அரசோ யுத்தகாலத்தைப் போலவே தன் படைப்பலப்பெருக்கத்தைச் செய்து வருகிறது. பிறநாடுகளுடனான கூட்டு ஒப்பந்தங்களும் செய்யப்படுகின்றன. ஆயுதக் கொள்வனவுகளும் நடைபெறுகின்றன. இதற்குச் சமாந்தரமாகவேனும் புலிகள் தம் படைப்பலத்தைப் பெருக்காத பட்சத்தில் அசட்டுத்துணிவில் போரைத் தொடங்க சிங்களம் முயலும்.

யுத்தத்தைத் தவிர்க்கக்கூட யுத்தக்கட்டமைப்பு வளர்ச்சிகளும் படைப்பெருக்கமும் உதவக்கூடும். தமிழர் படையின் படைவலு அதிகரிப்பதையிட்டுக் கொள்ளை மகிழ்ச்சிதான்.

“பலம் பலத்துக்கு மரியாதை செய்யும்.”












மேலதிகச் செய்திக்கும் படங்களுக்கும் இங்கே செல்லவும்.
நன்றி- புதினம்.

Labels: , , ,


Comments:
This comment has been removed by a blog administrator.
 
எழுதிக்கொள்வது: குழலி

ஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் கூட இந்த பதிவையும் படித்துப்பாருங்களேன்

http://kuzhali.blogspot.com/2005/04/blog-post_20.html
 
பின்னூட்டுக்கு நன்றி குழலி.
 
எழுதிக்கொள்வது: yaaro

தமிழர்களின் இராணுவ பலமெ தமிழர்களின் அரசியல் பலம்..தனை மாற்று இயக்கத்திளரே ஒப்புக்கொள்வர்.

22.16 5.7.2005
 
எழுதிக்கொள்வது: சினேகிதி

உந்துருளி என்றால் கப்பி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதற்கும் இந்தப்படையணியின் பெயருக்கும் தொடர்பு உண்டா பூராயம்?சினேகிதி

16.33 3.7.2005
 
This comment has been removed by a blog administrator.
 
உந்துருளி என்றால் கப்பி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதற்கும் இந்தப்படையணியின் பெயருக்கும் தொடர்பு உண்டா பூராயம்?
 
எழுதிக்கொள்வது: kulakaddan

//உந்துருளி என்றால் கப்பி என்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதற்கும் இந்தப்படையணியின் பெயருக்கும் தொடர்பு உண்டா பூராயம்?//

உந்துருளி என்பது கப்பியல்ல சினேகிதி. அது மோட்டார் சைக்கிள். கப்பிக்கூ விஞானத்தில் அப்படி ஒரு பெயர் படித்த ஞாபகம் இல்லை.


23.45 3.7.2005
 
This comment has been removed by a blog administrator.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]